Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் மோடி பேசவே கூடாது.. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அந்தரத்தில் மிதக்கும் பிரியா அட்லி… யோகா செய்யும் மாயம்
சென்னை: இயக்குநர் அட்லியின் மனைவி பிரியா, தனது யோகா மாஸ்டருடன் இனைந்து யோகா செய்யும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவரது யோகா மாஸ்டர் தனது காலால் தூக்க அந்தரத்தில் பறந்த படி அந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
உடலை கட்டு கோப்பாய் வைக்க யோகா செய்து வருகிறார் பிரியா அட்லி.
ராஜாராணி, தெறி, மெர்சல் மூன்று படங்களை மட்டுமே இயக்கி அந்த மூன்று படங்களையும் வெற்றிப் படங்களாக கொடுத்து முன்னணி இயக்குநர்களின் பட்டியலில், முன் வரிசையில் சேர் போட்டு அமர்ந்திருக்கும் இயக்குநர் என்றால் அது அட்லி தான். இவர் இயக்கிய மூன்று படங்களில் 2 படத்தில் தளபதி விஜய் தான் ஹீரோ.
நான்காவது படத்திலும் தளபதி விஜய்யை வைத்து பிகில் என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார் அட்லி. வருகின்ற தீபாவளி அன்று இப்படம் வெளியாக இருக்கிறது. அது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அட்லியின் மனைவி பிரியா, தனது யோகா மாஸ்டருடன் இனைந்து யோகா செய்யும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் அவரது யோகா மாஸ்டர் தனது காலால் தூக்க அந்தரத்தில் பறந்த படி அந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. பிரியா தற்போது நடிப்பதை நிறுத்தி விட்ட காரணத்தினால் உடலை கட்டு கோப்பாய் வைக்க யோகா செய்து வருகிறார். விஜய் டிவியின் கனா காணும் காலங்களில் அறிமுகமான இவர் அதற்கு பின் பல குறும்படங்களில் நடித்திருந்தார் அப்போது தான் அட்லியுடன் காதல் ஏற்பட்டது.
பிரியா அதற்கு பின் பல படங்களில் நடித்திருந்தார். சிங்கம் படத்தில் கூட அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்திருந்தார். விஜய் டிவியில் நடந்த சிவகார்த்திகேயன் உடன் ஒரு ஆடல் நிகழ்ச்சியிலும் கூட பங்கேற்று பல பாராட்டுகளை பெற்றிருந்தார். இப்படி பல திறமைகளை கொண்டவர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், மீன்டும் சினிமாக்கு நடிக்க வர வேண்டும் என்று அவருடைய நலம் விரும்பிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
View this post on InstagramA post shared by Priya Mohan (@priyaatlee) on