Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
சேர்க்கை சரியில்லையாம்.. தனது காதலருடன் பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் மீண்டும் மோதல்..!
சென்னை: நடிகை பிரியா பவானி சங்கருக்கும் அவர் காதலருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. சேர்க்கை சரியில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
சேனல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர், கல்யாணம் முதல் காதல்வரை என்ற டி.வி.தொடரில் நடித்தார்.
இது அவரை பிரபலமாக்கியது. அடுத்து சினிமா வாய்ப்புகள் வந்தன. மேயாத மான் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
ஹோம்லி லுக் ஹீரோயின் வீட்டில் அந்த மாதிரி பஞ்சாயத்தாம்.. அதிரடி முடிவுக்கு அதுதான் காரணமாமே!
கமல்ஹாசனின் இந்தியன் 2
அடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்தார். இதில் அவர் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. எஸ்.ஏ.சூர்யாவின் மான்ஸ்டர் படத்திலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. அடுத்து அருண் விஜய்யின் மாஃபியா படத்தில் நடித்தார். இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, ராதாமோகனின் பொம்மை உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
காதலர் ராஜ்வேல்
இவர் பற்றி காதல் கிசுகிசுகள் அடிக்கடி வெளியாகி வந்தன. அதை மறுத்து வந்த பிரியா, கடந்த சில மாதங்களுக்கு முன் தனது காதலர் ராஜ்வேலின் புகைப்படத்தை பதிவிட்டு, காதலை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். கல்லூரி காலத்தில் இருந்தே அவரைக் காதலித்து வருவதாகக் கூறி, தன்னைப் பற்றி வந்த கிசு கிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
காதலரை பிரிந்ததாக
பிறகு, தனது இன்ஸ்டாகிராமில் 'மாற்றங்கள் தரும் வலிகள் பழகக்கூடும், வலித்து மரத்து அடங்கிய பின் வரும் தெளிவு, அழகு' என்று கூறியிருந்தார். இதை வைத்து அவர் காதலரை பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாயின. இதை மறுத்திருந்தார் அவர். இந்நிலையில் இப்போது அவர்களுக்கு மீண்டும் செல்ல சண்டை ஏற்பட்டுள்ளது.
சமாதானம் ஆகிவிடலாம்
இதை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் பிரியா பவானி சங்கர். 'நாம் ஒருவருடன் கோபமாக இருந்தாலும், அவரோடுதான் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால், அவர் போட்டோ எடுப்பதன் மூலம் சமாதானம் ஆகிவிடலாம் என நினைக்கிறார் என்று கூறியுள்ள பிரியா பவானி சங்கர், #readyToBurst என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இருக்கிறார்.
சேர்க்கை சரியில்ல
இதையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன், பிரியா பவானியின் காதலர் ராஜவேலுக்கு டேக் செய்து, நல்லா பண்ணுனீங்க என்று கூறியுள்ளார். வாசுகி பாஸ்கர், என்னவொரு கோபம் என்று கூற, சேர்க்கை சரியில்ல என்று தெரிவித்திருக்கிறார், பிரியா பவானி சங்கர். சில ரசிகர்கள், என்னங்க திரும்பவும் சண்டையா? என்று கேட்டுள்ளனர்.