Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சச்சின் டெண்டுல்கரை சந்தித்த புருவ அழகி பிரியா வாரியர்!
கொச்சின் : ஒரே பாடலில் கண் சிமிட்டல் மூலம் உலகப் புகழ்பெற்ற புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர் தான் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்திருந்தார். சமூக வலைதளங்கள் முழுக்க பிரியா வாரியர் பற்றிய பேச்சாகவே இருந்தது.
பிரியா வாரியர் இடம்பெற்றிருந்த பாடல் வரிகள் குறித்த சர்ச்சையால் இவர் மீதும் சில மாநிலங்களில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு பிரியா வாரியர் மீதான நடவடிக்கையை செய்ததில் இன்னும் பரபரப்பாகி விட்டார் பிரியா வாரியர்.
இந்த நிலையில் நேற்று கொச்சியில் நடைபெற்ற இந்தியன் சூப்பர்லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியுடன் மோதிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை உற்சாகப்படுத்துவதற்காக பிரியா வாரியரும், அவருடன் 'ஒரு அடார் லவ்' படத்தில் புருவம் உயர்த்தி பிரபலமான நடிகர் ரோஷனும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை காண கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் வந்திருந்தார். அவரை ஸ்டேடியத்தில் சந்தித்த பிரியா வாரியர், தங்களது கேரள அணியின் ஜெர்ஸியை அவரிடம் வழங்கி உற்சாகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனால் பிரியா வாரியர் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.