Don't Miss!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
சச்சின் டெண்டுல்கரை சந்தித்த புருவ அழகி பிரியா வாரியர்!
கொச்சின் : ஒரே பாடலில் கண் சிமிட்டல் மூலம் உலகப் புகழ்பெற்ற புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர் தான் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்திருந்தார். சமூக வலைதளங்கள் முழுக்க பிரியா வாரியர் பற்றிய பேச்சாகவே இருந்தது.
பிரியா வாரியர் இடம்பெற்றிருந்த பாடல் வரிகள் குறித்த சர்ச்சையால் இவர் மீதும் சில மாநிலங்களில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு பிரியா வாரியர் மீதான நடவடிக்கையை செய்ததில் இன்னும் பரபரப்பாகி விட்டார் பிரியா வாரியர்.
இந்த நிலையில் நேற்று கொச்சியில் நடைபெற்ற இந்தியன் சூப்பர்லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியுடன் மோதிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை உற்சாகப்படுத்துவதற்காக பிரியா வாரியரும், அவருடன் 'ஒரு அடார் லவ்' படத்தில் புருவம் உயர்த்தி பிரபலமான நடிகர் ரோஷனும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியை காண கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும் வந்திருந்தார். அவரை ஸ்டேடியத்தில் சந்தித்த பிரியா வாரியர், தங்களது கேரள அணியின் ஜெர்ஸியை அவரிடம் வழங்கி உற்சாகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனால் பிரியா வாரியர் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.