Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நானும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறேன்: பெண் இயக்குனர் அறிவிப்பு, ஆரம்பமே குழப்பமா?
சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப் போவதாக இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளான் பிப்ரவரி 24ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என்றும், அன்றே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் எடுக்கப்படும் என்று படத்தை தயாரிக்கும் விப்ரியா மீடியாவின் தலைவர் பிருந்தா பிரசாத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்கப் போவதாக மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த ப்ரியதர்ஷினியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியிடப்படும் என்று ப்ரியதர்ஷினி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பு துவங்கும் என்றும், நடிகர், நடிகைகளின் பெயர் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார் ப்ரியதர்ஷினி.
விஜய் மற்றும் ப்ரியதர்ஷினி ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நாளில் துவங்குகிறது.