Don't Miss!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நானும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறேன்: பெண் இயக்குனர் அறிவிப்பு, ஆரம்பமே குழப்பமா?
சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப் போவதாக இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளான் பிப்ரவரி 24ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என்றும், அன்றே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் எடுக்கப்படும் என்று படத்தை தயாரிக்கும் விப்ரியா மீடியாவின் தலைவர் பிருந்தா பிரசாத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்கப் போவதாக மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த ப்ரியதர்ஷினியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியிடப்படும் என்று ப்ரியதர்ஷினி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பு துவங்கும் என்றும், நடிகர், நடிகைகளின் பெயர் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார் ப்ரியதர்ஷினி.
விஜய் மற்றும் ப்ரியதர்ஷினி ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நாளில் துவங்குகிறது.