Don't Miss!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- News பாஜக - விசிகவினர் இடையே அடிதடி.. 2 நிர்வாகிகளின் மண்டை உடைப்பு.. அரியலூரில் பதற்றம் - போலீஸ் குவிப்பு
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
நஷ்ட ஈடு கேட்டு புகார் கொடுத்த நடிகை பிரியாமணி.. ட்ரெய்லரை பார்த்து ஷாக்!
Recommended Video
சென்னை : நடிகை பிரியாமணி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரிடம் நஷ்ட ஈடு கேட்டு தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
தெலுங்கில் தயாராகி உள்ள 'ஆங்குலிகா' என்ற படத்தில் பிரியாமணி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பின்னர் விலகிவிட்டார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் ட்ரெய்லர் வெளியானது. இதைப் பார்த்த பிரியாமணி, தான் நடித்த காட்சிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பிரியாமணி
நடிகை பிரியாமணி தொழில் அதிபர் முஸ்தபா ராஜை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது படங்களில் நடிக்காமல் இருந்து வரும் பிரியாமணி, 'ஆங்குலிகா' படக்குழுவினரிடம் நஷ்ட ஈடு கேட்டு தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
விலகல்
தெலுங்கில் தயாராகி உள்ள 'ஆங்குலிகா' என்ற படத்தில் பிரியாமணி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். 5 வருடங்களுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் சில காட்சிகளில் நடித்ததும் பிரியாமணி தொடர்ந்து அந்த படத்தில் நடிக்காமல், படத்திலிருந்து விலகிவிட்டார்.
ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்த காட்சி
இந்நிலையில், 'ஆங்குலிகா' படத்தின் படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லரை பார்த்த நடிகை பிரியாமணி, தான் நடித்த காட்சிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
நஷ்ட ஈடு
"ஆங்குலிகா படத்திலிருந்து நான் 5 வருடங்களுக்கு முன்பே வெளியேறிவிட்டேன். ஆனால் ட்ரெய்லரில் விளம்பரத்துக்காக, நான் நடித்திருப்பது போன்ற காட்சிகளை வெளியிட்டுள்ளனர். படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்" என்று புகார் கொடுத்துள்ளார் பிரியாமணி.