Don't Miss!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- News மிளகாய் பொடி ஆயுதம்! ஆந்திராவில் சினிமா ஸ்டைலில்.. மண்டபத்திற்குள் நுழைந்து மணப்பெண்ணை கடத்த முயற்சி
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொலைகாரியாக மாறும் பிரியாமணி… ‘கொட்டேஷன் கேங்’ படம் குறித்து சூப்பர் தகவல் !
சென்னை : இயக்குனர் விவேக் இயக்கத்தில் உருவாக உள்ள கொட்டோஷன் திரைப்படத்தில் நடிகை பிரியாமணி ஒப்பந்த கொலையாளியாக நடிக்க உள்ளார்.
Recommended Video
இப்படி ஒரு வித்தியாசமான திரைப்படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக கூறியுள்ளார்.
பிரபு தேவாவோட பொன் மாணிக்கவேலும் ஓடிடியிலதான் ரிலீஸ்... விரைவில் அறிவிப்பு
இப்படத்தில் விஷ்ணு வாரியர், சதீந்தர், அக்ஷயா, கியாரா, சோனல், கேதன் கராந்தே , ஷெரீன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர்.
விரைவில் படப்பிடிப்பு
அருண்விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பாக்ஸர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ள விவேக் கொட்டேஷன் கேங் திரைப்படத்தை இயக்க உள்ளார், இப்படத்திற்கான பூஜை கடந்த டிசம்பர் மாதம் போடப்பட்டது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பாக்ஸர் படத்தை அடுத்து தொடங்கப்பட உள்ளது.
சாரா அர்ஜுன்
மும்பையில் நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கையை சொல்லும் இப்படத்தில் முக்கியமான ரோலில் தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுனு நடிக்க உள்ளார். இப்படம் மும்பை, ஆந்திரா, தமிழ்நாடு என பல இடங்களில் படமாக்கப்பட உள்ளது.
ஒப்பந்த கொலையாளி
இந்நிலையில் கொட்டேஷன் கேங் திரைப்படத்தில் ஒப்பந்தக் கொலையாளியாக நடிப்பது மிகுந்த உற்சாகமாக இருப்பதாக பிரியா மணி கூறியுள்ளார். சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வமாக இருப்பதாகவும், கேங் ஸ்டார் படம் என்பதால் தோற்றம், ஒப்பந்தனை குறித்து தற்போதே சிந்தித்து வருவதாகவும் பிரியாமணி கூறியுள்ளார். இப்படம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் வெளியிடப்படும்.
நக்சலைட்
பல படங்களை கைவசம் வைத்துள்ள பிரியாமணி, அசுரன் தெலுங்கு ரீமேக் படமான 'நாரப்பா' படத்திலும், ராணா தகுபதி, சாய் பல்லவியின் 'விராட்டா பர்வம்' படத்தில் நக்சலைட்டாக நடித்துள்ளார். சயனைடு மோகன் என்ற க்ரைம் த்ரில்லர் படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்து வருகிறார் பிரியாமணி.