Don't Miss!
- News தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு எப்போது? பள்ளி கல்வித்துறை சூப்பர் முடிவு
- Finance ஸ்மார்ட் போன் வாங்கப் போறீங்களா? ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் உயர்ரக பிராண்டட் போன்கள்..
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Automobiles பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலை அறிவிக்கப் போறது யார் தெரியுமா? பிரபல இந்திய நடிகைக்கு கிடைத்த பெருமை!
சென்னை: 93வது ஆஸ்கர் விருது விழாவுக்கான இறுதி பரிந்துரை பட்டியலை நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் இணைந்து அறிவிக்க உள்ளனர்.
வரும் திங்கட்கிழமை மார்ச் 15ம் தேதி ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வாகி உள்ள நாமினிகளை நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவருடன் இணைந்து அறிவிக்க உள்ளார்.
3 மாறுபட்ட கேரக்டர்களில் விஜய்...தளபதி 65 அடுத்த அப்டேட்டும் வெளியானது
மொத்தம் 23 பிரிவுகளுக்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் அன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது.
சினிமா உலகின் பெருமை
அமெரிக்க திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ஆஸ்கர் விருதுகள், சினிமா உலகின் உயரிய விருதாக உலக சினிமா ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. சிறந்த அயல்மொழி திரைப்படத்திற்கான பிரிவில் விருது வென்று விட மாட்டோமா என இந்தியா உள்ளிட்ட ஏகப்பட்ட நாடுகள் தவம் கிடக்கின்றன.
பிரியங்காவுக்கு கிடைத்த பெருமை
கடந்த 2016ம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருது கொடுப்பவராக நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலை வெளியிடும் பெருமை நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்துள்ளது. கணவர் நிக் ஜோனஸ் உடன் இணைந்து இந்த அறிவிப்பை வரும் மார்ச் 15 அன்று வெளியிடவுள்ளார் பிரியங்கா சோப்ரா.
ஆஸ்கர் விருது விழா
93வது ஆஸ்கர் விருது விழா வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான இறுதி செய்யப்பட்ட பரிந்துரை பட்டியல் வரும் மார்ச் 15ம் தேதி திங்கள் அன்று அறிவிக்கப்பட உள்ளது. மொத்தம் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் சமீபத்தில் இறுதி செய்யப்பட்டு வாக்கு செலுத்தும் முறையில் தேர்வாக உள்ளன.
சூரரைப் போற்று இடம்பெறுமா?
இந்தியா சார்பில் இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்ட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு ஆரம்பத்திலேயே வெளியேறி விட்டது. ஒடிடியில் வெளியான படங்கள் போட்டியிடலாம் என்கிற விதியின் கீழ் ஆஸ்கர் ரேஸில் கலந்து கொண்டுள்ள சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஒரு ஆஸ்கரையாவது வெல்லுமா? என்கிற எதிர்பார்ப்பில் இந்திய சினிமா ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.