இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது.. தடுப்பூசிகளை வழங்குகள்… ஜோ பைடனிடம் பிரியாங்கா சோப்ரா கோரிக்கை!
மும்பை : இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கி உதவி செய்திடுங்கள் என்று பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரிட்டன் நிறுவனத்திடமிருந்து 30 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.
அந்த தடுப்பூசிகளை உலகநாடுகளுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
கோரதாண்டவம்
நாடு முழுவதும்கொரோனா இரண்டாம்அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டுள்ளன. பல்வேறுமாநிலங்களில் இரவு ஊரடங்கு, வார இறுதிநாட்களில் முழு ஊரடங்குஅமல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள்கட்டாயம் முகக்கவசம்அணிந்து சமூக இடைவெளிபின்பற்ற வேண்டும்என அறிவுறுத்தியுள்ளனர்.
கட்டாயம் தடுப்பூசி
நாடு முழுவதும்கொரோனா பரவலைகட்டுப்படுத்த மே 1 ஆம்தேதிக்கு பிறகு18 வயதுக்கு மேற்பட்டஅனைவருக்கும் தடுப்பூசிவழங்கப்பட உள்ளது. இந்நிலையில் அனைவரும்கோ-வின் வலைதளத்தில்ஏப்ரல் 28 முதல்பதிவு செய்யவேண்டும் என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். மே 1ந் தேதி முதல் 18 வயது முதல் 44 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்காடான நிலையில்
இந்நிலையில், பாலிவுட் பிரபல நடிகை, கொரோனாவால் இந்தியா மிகவும் இக்காட்டான நிலைமையை சந்தித்து வருகிறது. எனவே இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கு உதவிடுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்வீர்களா?
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், என் இதயம் உடைகிறது. இந்தியா COVID19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் தேவைக்கு அதிகமாக 550M தடுப்பூசிகளை வாங்குவதற்கு அமெரிக்கா உத்தரவிட்டது உலகளவில் அஸ்ட்ராஜெனெகாவைப் பகிர்வதற்கு மிகவும் நன்றி. ஆனால் எனது நாட்டில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்தியாவுக்கு தடுப்பூசிகளை அவசரமாக பகிர்ந்து கொள்வீர்களா? என்று அந்தட்விட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











