Just In
- 20 min ago
பாய்க்குள் சுருட்டி அனுப்பப்பட்ட ஷிவானி.. சர்ப்ரைஸ் ஆன ஹவுஸ்மேட்ஸ்.. பாலாவை கண்டுக்கவே இல்லையே?
- 1 hr ago
ஒரே செக்கில் Plymouth Car! ராஜ சுலோச்சனா - ரீவைண்ட் ராஜா ஸ்பெஷல்!
- 1 hr ago
10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ? 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்!
- 2 hrs ago
3 மொழிகளில் உருவாகும் 'ஹீரோயின்'.. பாலியல் நடிகை கேரக்டருக்கு ரெடியாகும் பிரபல ஹீரோயின்!
Don't Miss!
- News
அந்த "இலை காலியா இருக்கு பாருங்க.." அன்பான மனசு இருக்கே.. அதுதான் ராகுல் காந்தி.. அசந்து போன மக்கள்!
- Sports
பந்தை எறிந்துவிட்டு.. கோபமாக முறைத்து பார்த்த ரோஹித் சர்மா.. இளம் இந்திய வீரருடன் மோதல்.. பின்னணி!
- Finance
350 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டு வரும் சென்செக்ஸ்.. டாப் 30 நிறுவனங்கள் அதிகச் சரிவு..!
- Automobiles
புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய வசதிகள்!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
இந்திய இராணுவ தினம் குறித்து தொிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லாக்டவுன் விதிகளை மீறி சலூன் விசிட்.. பிரியங்காவுக்கு போலீஸ் எச்சரிக்கையா? நடிகை இப்படி சொல்றாரே?
லண்டன்: கொரோனா விதிமுறைகளை மீறி எதையும் செய்யவில்லை என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய்யுடன் தமிழன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
போஸ்ட் புரொடக்ஷனில் அறிமுகப் படம்.. தமிழ் வெப் தொடரில் நடிக்கிறார் ஜாமீனில் வெளிவந்த நடிகை!
இப்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் அவர், நடிகர் நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

டெக்ஸ்ட் ஃபார் யூ
அமெரிக்காவில் வசித்து வரும் பிரியங்கா சோப்ரா, டெக்ஸ்ட் ஃபார் யூ (Text For You) என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். ஜிம் ஸ்ட்ரூஸ் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், லண்டனில் நடந்து வருகிறது. இதற்காக தனது கணவர் நிக் ஜோனாஸ், அம்மா மது சோப்ரா ஆகியோருடன் அங்கு சென்றுள்ளார்.

புதிய கொரோனா
இங்கிலாந்தில் இப்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருகிறது. இதனால், நாடு முழுவதும் மூன்றாவது முறையாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும், தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

லாக்டவுன் விதிகள்
ஊரடங்கு விதிகளின்படி, சலூன், ஸ்பா, மால்கள் முடப்பட்டுள்ளன. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் நடிகை பிரியங்கா தனது அம்மா மற்றும் செல்ல நாயுடன், பிரபல சிகை அலங்கார நிபுணர் ஜோஷ் வூட்டின், சலூனுக்கு சென்றார். இதைத் தொடர்ந்து லாக்டவுன் விதிகளை மீறியதாக, பிரியங்கா சோப்ராவை போலீசார் எச்சரித்தனர்.

பிரியங்கா மறுப்பு
சலூன் உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்ததாக லண்டன் மீடியாவில் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இதை, நடிகை பிரியங்கா சோப்ரா மறுத்துள்ளார். 'படப்பிடிப்பு தொடர அங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக, ஹேர் கலரிங் செய்வதற்காக போலீஸ் அனுமதி பெற்றே அவர் சென்றார்.

விதிமீறல் இல்லை
அதில் தொடர்புடையவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு, வழிகாட்டு விதிமுறைகள் சரியாகக் கடைபிடிக்கப்பட்டது. இதில் விதிமீறல் ஏதும் நடக்கவில்லை' என்று நடிகை பிரியங்கா சோப்ராவின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.