தொடையை அடுத்து உதட்டு பிரச்சனையில் சிக்கிய நடிகை பிரியங்கா
மும்பை: நடிகை பிரியங்கா சோப்ரா அறுவை சிகிச்சை மூலம் உதடுகளை பெரிதாக்கியுள்ளதாக நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துள்ளனர்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் பிசியாக உள்ளார். அமெரிக்க கடற்கரைகளில் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

செல்ஃபி
பிரியங்கா சோப்ரா காரில் இருந்தபடியே செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த செல்ஃபியை பார்த்தவர்களுக்கு பிரியங்காவின் உதடு தான் முதலில் கண்ணில் பட்டது.

கிண்டல்
பிரியங்காவின் செல்ஃபியை பார்த்தவர்கள் அவர் சிகிச்சை மூலம் உதடுகளை பெரிதாக்கியுள்ளதாக கிண்டல் செய்துள்ளனர். சிலர் பிரியங்காவின் உதடுகள் அழகாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அசிங்கம்
பிரியங்காவின் உதடுகள் அசிங்கமாக இருப்பதாகவும், அவரை பிளாஸ்டிக் பியூட்டி என்றும் கிண்டல் செய்துள்ளனர் நெட்டிசன்கள். முன்னதாக அவர் மூக்கை அறுவை சிகிச்சை செய்து அழகாக்கியதாகவும் கிண்டல் செய்தார்கள்.

மோடி
பெர்லினில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிரியங்கா கால் தெரியும்படி உடை அணிந்ததற்காக ஆளாளுக்கு அவரை சமூக வலைதளங்களில் திட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











