Don't Miss!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
10 வயது சிறியவர் மீது காதலில் விழுந்தது ஏன்?: ப்ரியங்கா சோப்ரா விளக்கம்
Recommended Video
நியூயார்க்: நிக் ஜோனஸ் மீது காதலில் விழுந்தது ஏன் என்று தெரிவித்துள்ளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சி நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை நான்கு நாட்கள் ஜோத்பூர் அரண்மனையில் நடைபெறுகிறது. திருமணம் டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. நிக் ப்ரியங்காவை விட 10 வயது சிறியவர்.
இந்நிலையில் நியூயார்க் நகரில் ப்ரியங்காவின் திருமண கொண்டாட்டம் துவங்கியுள்ளது.
'எங்க மேலயும் கேஸ் போடுங்கப்பா'... வாண்டடாக வண்டியில் ஏறும் உத்தரவு மகாராஜா!
நியூயார்க்
திருமணத்தை முன்னிட்டு ப்ரியங்காவின் தோழிகள் சேர்ந்து நியூயார்க் நகரில் அவருக்கு பார்ட்டி கொடுத்தனர். அந்த நிகழ்ச்சிக்கு அவர் திருமணப் பெண் போன்று உடை அணிந்து வந்திருந்தார். அந்த பார்ட்டியின்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
திருமணம்
எந்த ஒரு உறவாக இருந்தாலும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். இது தான் நிக் மற்றும் எனக்கு இடையே காதல் வலுப்பெற்றதற்கான முக்கிய காரணம். காபி போட்டு கொடுப்பது மரியாதை அல்ல. மாறாக நம்முடைய கடின உழைப்பை பாராட்டுபவராக இருக்க வேண்டும். ஆணின் வேலை போன்றே பெண்ணுக்கும் அவரின் வேலை முக்கியமானது என்பதை உணர்ந்தவராக இருக்க வேண்டும். அவர் முடிவுகள் எடுக்கும்போது நம்மிடமும் கருத்து கேட்க வேண்டும். அது தான் மரியாதை என்கிறார் ப்ரியங்கா சோப்ரா.
சோனாலி
ப்ரியங்கா சோப்ராவின் பார்ட்டிக்கு நடிகர் ரன்பிர் கபூரின் அம்மா நீத்து கபூர், நடிகை சோனாலி பெந்த்ரே உள்ளிட்டோர் வந்திருந்தனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சோனாலி நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். புற்றுநோயை தைரியமாக எதிர்த்து போராடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
போட்டி
திருமண விஷயத்தில் தீபிகா படுகோனே மற்றும் ப்ரியங்கா சோப்ரா இடையே போட்டி உள்ளதாக கூறப்படுகிறது. தீபிகாவின் திருமணம் நவம்பர் மாதம் 20ம் தேதி இத்தாலியில் நடைபெறுகிறது. ஆனால் மக்கள் ப்ரியங்கா சோப்ராவின் திருமணம் பற்றி தான் அதிகம் பேசுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.