இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை புற்றுநோயால் மரணம்
மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை இன்று காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை டாக்டர் அசோக் சோப்ரா. கடந்த 2005ம் ஆண்டில் அசோக் சோப்ராவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல் நலம் மிகவும் மோசமானது.

இதையடுத்து அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது. பிரியங்கா படப்பிடிப்புகளுக்கு செல்வதும் நேரம் கிடைக்கையில் தந்தையை வந்து பார்த்துக் கொள்வதுமாக இருந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு அசோக் மரணம் அடைந்தார்.
பிரியங்கா தனது தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர். தன் கையில் டாட்ஸ் லிட்டில் கேர்ள் என்று அதாவது தந்தையின் குட்டி மகள் என்று பச்சை குத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











