Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
‘ஏன் இப்டி டிரஸ் போடணும்.. அப்புறம் கைய வெச்சு மறைக்கணும்’.. வெட்கத்தில் நெளிந்த பிரியங்கா சோப்ரா!
பொது நிகழ்ச்சியில் ஒன்றில் நடிகை பிரியங்கா சோப்ராவின் ஆடை நழுவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
மும்பை: ஏடாகூடமாக ஆடை அணிந்து வந்ததால், நடிகை பிரியங்கா சோப்ரா பொது இடத்தில் அசிங்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா, விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானார். பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அவர், இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார்.
அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை பிரியங்கா சோப்ரா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைப்பிரியா ஜோடியாக உலகம் முழுவதும் சுற்றி வருகின்றனர்.
பாராட்டு
பர்ஹான் அக்தருடன் இணைந்து பிரியங்கா சோப்ரா நடித்துள்ள 'தி ஸ்கை இஸ் பிங்க்' படம் நேற்றைக்கு ரிலீசானது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்திற்கு நல்ல விதமாக விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
தேவையில்லாத சர்ச்சை
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தேவையில்லாத சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். சமீபத்தில் தனியார் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் ஒன்றில் பிரியங்கா கலந்துகொண்டார். அப்போது டிராஸ்பரண்டான நெட் வகையிலான உள்ளாடை அணிந்து, அதற்கு மேல ஓவர் கோர்ட் போல் கருப்பு நிற ஆடை அணிந்திருந்தார்.
நழுவிய ஆடை
பிரியங்கா சோப்ரா மேடை ஏறி போட்டோவுக்கு போஸ் கொடுத்த போது, இடது பக்கத்தின் கோர்ட் கட்டிங் முழுவதுமாக பிரிந்து, பேண்டீஸ் தெரியும்படியாக நேர்ந்தது. இதையடுத்து அவர் தனது கைகளை வைத்து அந்த இடத்தை மறைத்துக்கொண்டார். இதனை போட்டோகிராப்பர்கள் க்ளிக் செய்துவிட்டனர்.
View this post on InstagramA post shared by instantbollybytes (@instantbollybytes) on
ஏன் இப்படி?
பிரியங்கா சோப்ராவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இப்படி ஆடை ஆணிய வேண்டும்? பிறகு இப்படி அவஸ்தை பட வேண்டும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
காற்றில் பறந்த பாவாடை
பிரியங்கா சோப்ராவுக்கு இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே மும்பை கடற்கரையில் ஒரு போட்டோ ஷூட்டின் போது பாவாடை காற்றில் பறந்த வீடியோ வைரலானது. அதேபோல் தொலைக்காட்சி பேட்டிக்கு அவர் செக்ஸியாக ஆடை அணிந்து வந்ததும் பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.