பிரியங்காவை கடுப்பேத்திய அந்த கேள்வி…!
இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா சட்டென கோபமடைந்து பேசியுள்ளார்.
மும்பை: நிக் ஜோனஸ் பற்றி கேட்கப்பட்டதற்கு சட்டென கோபமடைந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், பாப் இசைப்பாடகர் நிக் ஜோனஸும் காதலித்து வருவதும், அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததும் தெரிந்த விஷயம். இந்த நிலையில், காதலைப் பற்றி கேட்டவர்களிடம் கடுமையாக கொந்தளித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

சமீபத்தில் மும்பையில் நடந்த தனியார் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று மலர்ந்த முகத்தோடு காட்சியளித்துள்ளார். அப்போது நிக் ஜோன்ஸுக்கும் உங்களுக்கும் உள்ள உறவைப் பற்றிக்கூறுங்கள் என்று கேட்கப்பட்டவுடன், புன்னகைப்பூவாய் மலர்ந்திருந்த பிரியங்கா சூடானக் கல்லில் தண்ணீர் தெளித்ததுபோல் சுர்ர்ர் என்று கோபமடைந்திருக்கிறார்.
என்னுடைய வாழ்க்கை உங்களுக்கு தீனி போடுவதற்காக அல்ல. நான் ஏற்கனவே என்னுடைய 90 சதவிகித வாழ்க்கையை அப்படியே கழித்துக்கொண்டிருக்கிறேன். மீதமுள்ள 10 சதம் வாழ்க்கை எனக்கானது. நான் ஒரு பெண், அதை என்னுடைய தனிப்பட்ட விஷயமாக வைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது என்றார்.
மேலும், என்னுடைய குடும்பம், நண்பர்கள், உறவுகளை பாதுகாக்கவோ அல்லது அது பற்றி யாருக்கும் விளக்கம் கொடுக்கவோ அவசியமில்லை என நினைக்கிறேன் என காட்டமாக பதிலளித்துள்ளார்.
தன்னை விட வயதில் இளையவரை பிரியங்கா திருமணம் செய்யப் போகிறார் என ஊடகங்கள் கிண்டலடித்ததே அவரின் கோபத்திற்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











