Don't Miss!
- News வாய்தா மேல் வாய்தா! நடிகை விஜயலட்சுமி ஏப்ரல் 2ல் ஆஜராக அவகாசம்.. சீமான் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இப்ப "இது" ரொம்ப முக்கியமா....பிரியங்காவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
மும்பை : 2000 ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து 2002 ம் ஆண்டு விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார். முதல் படத்திலேயே சொந்த குரலில் பாடல் ஒன்றையும் பாடி அசத்தினார். அதற்கு பிறகு இந்திக்கு சென்ற பிரியங்காவிற்கு பெரிய அளவில் பட வாய்ப்புக்கள் குவிந்தது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா, இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஹாலிவுட் படங்கள், அமெரிக்க டிவி ஷோக்களிலும் பங்கேற்று, சர்வதேச நடிகையானார். 2018 ம் ஆண்டு அமெரிக்க பாடகரான நிக் ஜோன்சை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது திரையுலக அனுபவங்களையும், உடன் பணியாற்றியவர்களை பற்றியும் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி, அதை ப்ரோமோட் செய்யும் பணியில் பிரியங்கா ஈடுபட்டு வருகிறார். அத்துடன் நியூயார்க் நகரில் ரெஸ்டாரென்ட் தொழிலையும் துவக்க உள்ளார். ஏற்கனவே தனது சமூக சேவையால் யுனிசெஃப் தூதராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அடிக்கடி கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டும் வருகிறார். அப்படி நேற்று கவர் ஃபோட்டோ ஒன்றிற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த ஃபோட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா வெளியிட்டிருந்தார். இந்த ஃபோட்டோவை இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். 8000 க்கும் அதிகமானவர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
ஆனால் நாடு இப்போது இருக்கும் கொரோனாவின் தீவிர தாக்கமான, நெருக்கடியான சூழலில் இது போன்ற கவர்ச்சி ஃபோட்டோஷுட் விளம்பரம் தேவையா என நெட்டிசன்கள் இந்த ஃபோட்டோவை ட்ரோல் செய்து, கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சமூக பணிகளில் ஈடுபடுவோர், நாடு இருக்கும் நெருக்கடியான சூழலில் உதவிகள், விழிப்புணர்வுகளை ஏற்படுவதை தவிர்த்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சரியா என அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர்.