Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
11 புள்ள பெத்துக்கணும், நல்ல மாப்பிள்ளை கிடைப்பது தான் கஷ்டமாக இருக்கு: ப்ரியங்கா சோப்ரா
Recommended Video
மும்பை: திருமணம் செய்து 11 குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என்று நடிகை ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
பாலிவுட், ஹாலிவுட் என்று மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா. இது தவிர அவர் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அவர் எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.
ப்ரியங்காவுக்கு 35 வயதாகிறது. அவர் தற்போது திருமணம் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்.
மாப்பிள்ளை
இத்தனை நாட்கள் திருமணம் பற்றி கேட்டாலே நேரம் வரும்போது நடக்கும் என்பார் ப்ரியங்கா. இந்நிலையில் அவர் திருமணம் பற்றி தற்போது கூறியிருப்பதாவது, எனக்கு ஏற்ற மாப்பிள்ளையை நான் இன்னும் பார்க்கவில்லை என்கிறார்.
அம்மா
நான் கடினமாக உழைத்து இந்த அளவுக்கு முன்னேறியுள்ளேன். என் கடின உழைப்பை மதிக்கும் நபரையே திருமணம் செய்ய வேண்டும் என்று என் அம்மா சொல்லியுள்ளார் என ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
ஆசை
நான் நிச்சயம் திருமணம் செய்ய விரும்புகிறேன். 11 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள ஆசை உள்ளது. ஆனால் சரியான மாப்பிள்ளை கிடைப்பது தான் கடினமாக உள்ளது என்று ப்ரியங்கா கூறியுள்ளார்.
கிசுகிசு
முன்னதாக ப்ரியங்கா சோப்ராவுக்கும், ஷாருக்கானுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக பாலிவுட்டில் பேச்சாக கிடந்தது. அதன் பிறகு ப்ரியங்காவும், நடிகர் ஷாஹித் கபூரும் காதலித்து பிரிவதும், சேர்வதுமாக இருந்தனர். பின்னர் ஷாஹித் ப்ரியங்காவை பிரிந்து மீரா ராஜ்புட்டை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.