Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அந்த பிரச்சனை தான் காரணமா? ராஜுவை டார்கெட் பண்ணும் பிரியங்கா.. தேவையில்லாமல் ஒரு சண்டை!
சென்னை: ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் ஒபி அடிக்கிறார் என அவருடன் சண்டைக்கு சென்றார் பிரியங்கா.
நேற்றைய எபிசோடில் தான் பாவனிக்கும் ராஜுவுக்கும் இடையே உள்ள பனிப்போரை தீர்த்து வைக்க பாடுபடுவதாக நடித்தார் பிரியங்கா.
இந்நிலையில், தற்போது ராஜுவை வேண்டும் என்றே தவறாக காட்ட வேண்டும் என்கிற நோக்கில் பிரியங்கா சண்டை போட்டதாக ராஜுவே கூறியது பரபரப்பை கிளப்பி உள்ளது.
பாவனியை ராஜு கட்டிப்பிடித்து கன்னத்தை கிள்ள வைக்க பிளான் பண்ண பிரியங்கா.. எல்லாம் எதுக்கு தெரியுமா?
தூங்கும் போது சண்டை
பிக் பாஸ் வீட்டின் லைட் எல்லாம் ஆஃப் செய்து விட்டு படுக்கையில் அனைவரும் படுக்க சென்ற நிலையில், பிரச்சனையை ஆரம்பித்தார் பிரியங்கா. ராஜு சூப் குடித்த பவுலை கழுவ சொல்வது போல ஆரம்பித்த சண்டை ஏகப்பட்ட விஷயங்களை வெளிக் கொண்டு வந்தது.
ஒபி அடிக்கும் ராஜு
பிக் பாஸ் வீட்டில் எந்தவொரு வேலையும் செய்யாமல் ராஜு ஜெயமோகன் இதுவரை ஒபி அடித்து வருவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார் கேப்டன் பிரியங்கா. ராஜு அதனை மறுத்த பேச பிரியங்கா தொடர்ந்து வாய்ஸ் ரைஸ் பண்ணி ராஜு எந்த வேலையையும் செய்யவில்லை என கச்சேரி வைத்தார்.
டென்ஷனான ராஜு
பிரியங்கா தொடர்ந்து தன்னை தாக்கும் வகையில் பேசுவதை கண்டு ராஜு ஜெயமோகன் கொஞ்சம் டென்ஷன் ஆகி விட்டார். பாவனியிடம் சொன்னதை போலவே நான் எப்போதெல்லாம் வேலை செஞ்சேன்னு உங்கிட்ட சொல்லணுமா என கேட்டதும் பிரியங்கா சண்டையை பெரிதாக்கி விட்டார்.
அழுது புலம்பிய பிரியங்கா
இந்த வீட்டில் எவ்வளவோ பிரச்சனை நடந்தது அப்போதெல்லாம் அமைதியாக இருந்த நீ நான் கேட்டதும் என்னை கத்திட்டல என் கூட சண்டை போடுறல என இஷ்டத்துக்கு கத்தி சண்டையை போட்டு விட்டு கடைசியாக பிளேட்டை அப்படியே திருப்பி ராஜு சண்டை போட்டார் என பிரியங்கா பிராண்ட் பண்ணதை புரிந்து கொண்ட ராஜு கொஞ்சமும் கடுப்பாகாமல் என் மீது தான் தப்பு மன்னிச்சிடு என மன்னிப்பு கேட்டார்.
யாருமே கண்டுக்கல
நாம இரண்டு பேரும் சண்டை போட்ட நிலையில் ஏன் யாருமே நம்மை சேர்த்து வைக்க முயற்சி செய்யவில்லை என மறுபடியும் பிரியங்கா ராஜுவிடம் அப்படியே பாவமான முகத்தை வைத்துக் கொண்டு கேட்டு நட்பானதை பார்த்த ரசிகர்கள் யப்பா இது உலக மகா நடிப்புடா சாமி. பிரியங்காவோட ரியல் கேரக்டர் என்னன்னு புரியவே மாட்டேங்குதே என குழம்பி உள்ளனர்.
அதுதான் காரணமா
பாவனியுடன் ராஜுவை சேர்த்து வைக்க பிரியங்கா முயற்சி செய்தும் ராஜு அதற்கு மறுப்பு தெரிவித்தது தான் ராஜு மற்றும் பிரியங்கா இடையே இப்படியொரு சண்டை எழ காரணமா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், எந்த நேரமும் சாப்பாட்டு தட்டுடன் இருக்கும் பிரியங்கா ராஜுவை பார்த்து வேலையே செய்வதில்லை என சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர் என ராஜுவின் ஆர்மியினர் பிரியங்காவை கலாய்த்து வருகின்றனர்.
பிரியங்கா பிரமாதம்
பிரியங்கா மற்றும் பாவனி ஆர்மியினர் ராஜுவின் வேலை செய்யாத முகத்திரையை கிழித்துத் தொங்கவிட்டு விட்டார் பிரியங்கா. இதே போல ஒவ்வொருவரும் ராஜுவை காலி செய்தால் அடுத்த வாரமே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுவார் என கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.