Don't Miss!
- Sports சாஹலின் மனைவியா இது? நீச்சல் குளத்தில் நண்பருடன் ஜாலி குளியல்.. கோபத்தில் ரசிகர்கள்.. உண்மை என்ன?
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒவ்வொரு வாரமும் அண்ணாச்சியை நாமினேட் பண்றேன்...ஓப்பனாக சொன்ன பிரியங்கா
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 62 வது நாளான இன்றைய எபிசோட்டை தொகுத்து வழங்க மீண்டும் கமல் வந்துள்ளார். தான் விரைவில் குணமடைய வேண்டிக் கொண்ட அனைவரின் அன்பிற்கும் வந்த உடனேயே நன்றி சொல்லி நிகழ்ச்சியை துவக்கினார் கமல்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் 61 வது நாள் நடைபெற்ற நிகழ்வுகள் காட்டப்பட்டன. இதில் ஆரம்பத்தில் வழக்கம் போல் சிறு பிரச்சனைகளுடன் துவங்கி, பிறகு பெயிண்ட் டாஸ்கில் அனைவரும் ஒற்றுமையாக விளையாடினர். இதற்காக வழங்கப்பட்ட பரிசினையும் சந்தோஷமாக ஹவுஸ்மேட்கள் பகிர்ந்து கொண்டனர்.
அண்ணாச்சியை நாமினேட் பண்றேன்
61 வது நாள் இரவு, பாவ்னியும் பிரியங்காவும் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாவ்னியிடம், எனக்கும் அண்ணாச்சிக்கும் பிரச்சனை வந்த நாள் முதல் நான் அண்ணாச்சியை தான் நாமினேட் செய்கிறேன் என பிரியங்கா ஓப்பனாக சொல்கிறார். ஒவ்வொரு நாமினேஷனிலும் நான் அவரை நாமினேட் செய்கிறேன் என கூறுகிறார்.
எப்படி அடித்தேன் தெரியுமா
அவர் ஒன்னு பண்ணணும்னு நினைக்கிறார். அதை தான் பண்ண வேண்டும் என நினைக்கிறார். அதை வைத்து அனைவரையும் கவிழ்க்க வேண்டும் என நினைக்கிறார். அது முடியாது. அவரது கேம் ஸ்பிரிடிற்கு பணியவில்லை என்றால் அவர் ஒரு மாதிரி ஆகிறார். ஏத்தி விட்டு ஒன்னு பண்ணுகிறார். நானெல்லாம் அந்த ஸ்பிரே எப்படி அடித்தேன் தெரியுமா.
ஓப்பனாக பேசிய பிரியங்கா
என்ன நினைச்ச நீ. சும்மா புஷ்னு அடிச்சேன் என நினைக்கிறீயா. முகத்தில் ஒரு புள்ளி கூட தெரியாத அளவிற்கு அடித்தேன். நிரூப்பை பயன்படுத்தி தான் நான் எல்லாம் பண்ணனுமா. என்ன இது என கேட்கிறார் பிரியங்கா. இதை கேட்டு மிரட்சியும், குழப்பமும் கலந்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார் பாவ்னி.
என்ன கோபம் அண்ணாச்சி மேல்
ஒவ்வொரு வாரமும் தான் தவறாமல் இமான் அண்ணாச்சியை நாமினேட் செய்வதை பிரியங்கா ஓப்பனாக பேசியதை பார்த்த நெட்டிசன்கள், பிரியங்காவிற்கு அண்ணாச்சி மீது அப்படி என்ன கோபம் என கேட்டு வருகின்றனர். நாமினேட் செய்தேன் என சொல்வதை கூட கோபமாகவே சொல்கிறாரே என கேட்டுள்ளனர்.
பிக்பாஸ் கண்டிக்கமாட்டாரா
பிக்பாஸ் விதிகளின்படி நாமினேட் பற்றி வெளியே சொல்லக் கூடாது. ஆனால் பிரியங்கா உள்ளிட்ட போட்டியாளர்கள் பலர் நாமினேஷன் பற்றி இவ்வளவு ஓப்பனாக மற்றவர்களிடம் பேசுகிறார்கள். இது விதிமீறல் ஆகாதா. இதை ஏன் பிக்பாஸ் கண்டிப்பது கிடையாது என நெட்டிசன்கள் பலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!