உன்னை ஈவில்னு சொல்லல.. பிரியங்காவின் ஈகோவை தொட்ட பாவனி.. அந்த ஒரு நிமிஷம் ஜீலி சந்திரமுகியானா!
சென்னை: பிரியங்காவின் ஈகோவை முட்டை உடைக்கும் டாஸ்க்கில் தாமரை தொட்ட நிலையில் தான் மிகப்பெரிய சண்டையே வெடித்தது.
இந்நிலையில், நிரூப்புக்கு சப்போர்ட் செய்து பேசிய பாவனி பிரியங்காவின் ஈகோவை டச் பண்ண அவர் சட்டென சந்திரமுகியாக மாறியதை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.
ராஜுவுடன் சேர்ந்து கொண்டு ஜீலி பண்ணியபடியே வின் பண்ணலாம்னு இருக்க என்னை கடுப்பேத்தாதே என்பது போல பிரியங்கா பேச பாவனி பயந்தே போய் விட்டார்.

நிரூப் சார்பாக
ஒட்டுமொத்த வீட்டையும் பகைத்துக் கொண்டு இருக்கும் நீருப்புக்கு ஆதரவாக பாவனி பேச வந்த போது பிரியங்கா உச்சகட்ட கோபம் அடைந்தார். அவன் குழந்தை இல்லை நீ அவனுக்கு சார்பாக பேசாதே.. எல்லா ஸ்ட்ராட்டஜியும் அவனுக்குத் தெரியும் என விளாசித் தள்ளினார். நிரூப் மற்ற ஹவுஸ்மேட்களை மட்டம் தட்டும் விதமாக பேசியதும் அமீர், சிபி பிரியங்கா ஆவேசமடைந்தனர். அந்த நேரத்தில் நிரூப்புக்காக பாவனி பேசினார்.

பாவனியிடம் கிசுகிசு
பாவனி மற்றும் அமீர் கிசுகிசுவென பேசி பார்த்த ரசிகர்கள் திடீரென நிரூப் பாவனி அருகே உட்கார்ந்து கொண்டு ஒட்டுமொத்த வீடும் தனக்கு எதிராக எப்படி திரும்பி டிராமா போடுகிறார்கள் பார் என பாவனியை பக்காவாக பிரைன் வாஷ் பண்ணி கொண்டிருந்தார் நிரூப். அதை நம்பி பிரியங்காவிடம் பாவனி தூது போக நல்லாவே வாங்கிக் கட்டிக் கொண்டார்.

பிரியங்காவின் ஈகோ
நிரூப்புக்காக நீ ஒன்றும் பேச வேண்டாம் உனக்கு ஒன்றும் அவனை பற்றித் தெரியாது என பிரியங்கா தனது தோழி பாவனியை எச்சரித்து வரும் நிலையில், பாவனி பிரியங்காவை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்க பிரியங்காவின் ஈகோ வெடித்து சிதறியது. என்னை பார்த்து சிரிக்கிறியா பாவனி என பிரித்து மேய்ந்து விட்டார் பிரியங்கா.

ஈவில்னு உன்னை சொல்லல
சிரிக்கிறியா பாவனி என ஆவேசமாக கேட்ட பிரியங்கா அவன் உன்னை பார்த்து ஈவில்னு சொல்லல என பிரியங்காவை நிரூப் ஈவில், குழியில் தள்ளிவிடுவாள் என சொன்ன அனைத்தையும் மறக்காமல் மனதுக்குள் வைத்திருந்த நிலையில், பாவனியின் அந்த ஒற்றை சிரிப்பு பிரியங்காவை வெடித்து சிதற செய்து விட்டது.
Recommended Video

ஒரு நிமிட சந்திரமுகி
ஒரு நாள் முதல்வர் போல அந்த ஒரு நிமிடம் சந்திரமுகியாக மாறினார் பிரியங்கா. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு இதுக்கு மேல சண்டை போடாமல் சும்மா ஜீலி பண்ணிட்டு போய்டலாம் என பிரியங்கா இருந்தால் கூட நிரூப் மற்றும் பாவனி அவரை சும்மா இருக்க விட மாட்டார்கள் போல என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











