Don't Miss!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
என்னிடம் கணக்கில் வராத சொத்துக்கள் இல்லை-பிரியங்கா சோப்ரா
சமீபத்தில் நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் காத்ரீனா கைப் ஆகியோரது வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. இதில் பிரியங்காவுக்கு மும்பையில் மட்டும் 11 வீடுகள் இருப்பது தெரியவந்ததாக செய்திகள் கூறின. மேலும் கணக்கில் வராத சொத்துக்கள் பலவும் அவரிடம் இருப்பதாகவும் செய்திகள் கூறின.
ஆனால் இதை பிரியங்கா மறுத்துள்ளார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிரியங்காவிடம் கணக்கில் வராத சொத்துக்கள் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை, அவருக்கு அவப் பெயரை ஏற்படுத்துவதற்காக பரப்பி விடப்பட்டவை இவை. இந்த செய்திகளை பிரியங்கா முழுமையாக மறுக்கிறார். யாரோ முகம் தெரியாத சிலர் தரும் இந்த தவறான செய்திகளை மீடியாக்கள் கண்மூடித்தனமாக வெளியிடுவது குறித்து பிரியங்கா வருத்தமடைந்துள்ளார்.
வருமான வரித்துறையினருக்கு பிரியங்கா முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார். விசாரணைக்கு அவர் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். விசாரணை தொடருவதால் இதற்கு மேல் விளக்கம் அளிக்க விரும்பவில்லை என்றார்.
பிரியங்காவிடம் 11 வீடுகள் தவிர 6 கோடி அளவுக்கு கணக்கில்வராத பணமும் இருப்பதாகவும் வருமான வரி விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.