Don't Miss!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- News கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்.. நள்ளிரவில் திடீரென போராட்டத்தில் குதித்த பயணிகள்
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னிடம் கணக்கில் வராத சொத்துக்கள் இல்லை-பிரியங்கா சோப்ரா
சமீபத்தில் நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் காத்ரீனா கைப் ஆகியோரது வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. இதில் பிரியங்காவுக்கு மும்பையில் மட்டும் 11 வீடுகள் இருப்பது தெரியவந்ததாக செய்திகள் கூறின. மேலும் கணக்கில் வராத சொத்துக்கள் பலவும் அவரிடம் இருப்பதாகவும் செய்திகள் கூறின.
ஆனால் இதை பிரியங்கா மறுத்துள்ளார். இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிரியங்காவிடம் கணக்கில் வராத சொத்துக்கள் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை, அவருக்கு அவப் பெயரை ஏற்படுத்துவதற்காக பரப்பி விடப்பட்டவை இவை. இந்த செய்திகளை பிரியங்கா முழுமையாக மறுக்கிறார். யாரோ முகம் தெரியாத சிலர் தரும் இந்த தவறான செய்திகளை மீடியாக்கள் கண்மூடித்தனமாக வெளியிடுவது குறித்து பிரியங்கா வருத்தமடைந்துள்ளார்.
வருமான வரித்துறையினருக்கு பிரியங்கா முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார். விசாரணைக்கு அவர் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். விசாரணை தொடருவதால் இதற்கு மேல் விளக்கம் அளிக்க விரும்பவில்லை என்றார்.
பிரியங்காவிடம் 11 வீடுகள் தவிர 6 கோடி அளவுக்கு கணக்கில்வராத பணமும் இருப்பதாகவும் வருமான வரி விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.