Don't Miss!
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக! சாப்பிட்ரோ விஷயத்தை கை கழுவிய காங்கிரஸ்
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாகுபலிக்காக பந்த் வேணுமாம்: கிளம்பிட்டாருய்யா வாட்டாளு நாகராஜ்
பெங்களூர்: கர்நாடகாவில் பாகுபலி 2 படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கூறி படம் வெளியாகும் நாள் அன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
ராஜமவுலியின் பாகுபலி 2 படம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. கட்டப்பாவாக நடித்துள்ள சத்யராஜ் காவிரி நீர் பிரச்சனையின்போது கன்னடர்களை அவதூறாக பேசியதாகக் கூறி ஒரு வீடியோ வைரலானது.
கன்னடர்களை தவறாக பேசியதற்கு சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் தொடர்ந்து கூறி வருகின்றன.
இந்நிலையில் பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் தடை செய்ய வேண்டும் என கன்னட ஆர்வலர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் படம் ரிலீஸாகும் அன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு 2 ஆயிரம் கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவிள்ளதாக நாகராஜ் கூறியுள்ளார்.
நாகராஜ் மேலும் கூறுகையில்,
சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும். பாகுபலி 2 படத்தை திரையிட வேண்டாம் என தியேட்டர் உரிமையாளர்களை கேட்டுக் கொள்கிறோம். படத்தை கர்நாடகாவுக்கு கொண்டு வர வேண்டாம் என வினியோகஸ்தர்களை கேட்டுள்ளோம். நாங்கள் படத்திற்கு எதிராக இல்லை. இந்த விஷயத்தில் மாநில அரசு தலையிட்டு படத்தை திரையிட விடாமல் செய்ய வேண்டும் என்றார்.