Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கமல் ஹாஸனுக்கு பிஆர்ஓ யூனியன் வாழ்த்து!
பத்மபூஷண் விருது பெற்ற கமல் ஹாஸனுக்கு பிஆர்ஓ யூனியன் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர் அதன் நிர்வாகிகள்.
கமல் ஹாஸனுக்கு சமீபத்தில் பத்மபூஷண் விருது அறிவித்தது மத்திய அரசு.
இதைத் தொடர்ந்து அவருக்கு தமிழ் திரையுலகினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நேரில் வந்து வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
தொடர்ந்து பலரும் கமலை வாழ்த்த விரும்புவதை உணர்ந்து, தனது வேலைகளை சற்று ஒதுக்கி வைத்து அவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறார்.
இது அவரது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கமல் ஹாஸன் என்ற பெரிய கலைஞரை தாங்களும் வாழ்த்த முடியும், அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியும் என்பதே பலரையும் சந்தோஷப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கமல்ஹாஸனை தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர் யூனியன் நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
யூனியனின் தலைவர் டயமண்ட் பாபு, செயலாளர் பெரு துளசி பழனிவேல், பொருளாளர் பாலன், துணைத் தலைவர்கள் கோவிந்தராஜ், வெங்கட், செயற்குழு உறுப்பினர்கள் நிகில் முருகன், கிளாமர் சத்யா, மூத்த உறுப்பினர் நெல்லை சுந்தரராஜன், தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினரும் பிஆர்ஓவுமான விஜயமுரளி, சிங்காரவேலு ஆகியோர் கமல் ஹாஸனுக்கு பொன்னாடை போர்த்து, மலர்க் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.