Don't Miss!
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- News வண்டலூர் திமுக ஊராட்சி மன்ற தலைவி டிரைவருடன் அதிரடியாக கைது.. திமுக நிர்வாகி கொலையில் திடுக் தகவல்
- Finance 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்கள்
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
தாய் சொல்லை மதிப்பாரா சிம்பு... மீண்டும் தொடங்குகிறதா மாநாடு ஷூட்டிங்?
டிராப் என் அறிவிக்கப்பட்ட சிம்புவின் மாநாடு படம் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் அம்மா உஷா, தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததே இதற்கு காரணமாம்.
Recommended Video
சென்னை: செக்கச்சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன் படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமானார்.
ஆனால், அவர் ஒழுங்காக ஷூட்டிங்கிற்கு வரவில்லை என்றும், இதனால், படத்தை டிராப் செய்வதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
தற்போது, சிம்புவின் அம்மா நடத்திய பேச்சுவார்த்தையால், மீண்டும் மாநாடு படம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்.. ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ஒளிபரப்பான பாகுபலி!
என்ன பிரச்னை?
செக்கச்சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன் படங்களில் நடித்ததன் மூலம் மீண்டும் ஃபுல் ஃபார்முக்கு சிம்பு வந்துவிட்டார் என சிம்பு ரசிகர்கள் சந்தோஷப்பட்டிருந்த நிலையில், திரும்பவும் சரியான நேரத்திற்கு ஷூட்டிங் வருவதில்லை என்ற பிரச்னை கிளம்பியது.
படங்கள் டிராப்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த மாநாடு பட ஷூட்டிங்கிற்கு சொன்ன நேரத்திற்கு சிம்பு வருவதில்லை எனக் கூறி படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அந்த படத்தை டிராப் செய்து விட்டார். இதே போல, கன்னட ரீமேக் படமான மஃப்டியும் டிராப் ஆனது.
நான் பொறுப்பு
மாநாடு படம் டிராப் ஆன நிலையில், சிம்புவுக்கு புதிய படங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், டி.ராஜேந்தரின் மனைவி மற்றும் சிம்புவின் அம்மாவான திருமதி உஷா, படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம்.
அப்போது, இனி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு இருப்பார் அதற்கு தான் பொறுப்பு என சிம்புவின் அம்மா கூறியுள்ளதாகவும் இந்த பேச்சுவார்த்தைக்கு சுரேஷ் காமாட்சி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் மாநாடு
பேச்சுவார்த்தை வெற்றி அடைந்த நிலையில், டிராப் செய்யப்பட்ட மாநாடு படத்தை மீண்டும் எடுக்கும் முடிவில் தயாரிப்பு தரப்பு இறங்கியுள்ளதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.