Just In
- 12 min ago
பேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ!
- 9 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 9 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வடிவேலுவை விடாமல் துரத்தும் ‘இம்சை அரசன்’ பிரச்சினை.. ‘பேய்மாமா’விற்கும் தடை?
சென்னை: சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட பேய் மாமா படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இம்சை அரசன் 23ம் புலிகேசி பட வெற்றியைத் தொடர்ந்து, ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன்-வடிவேலு கூட்டணியில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் தொடங்கப்பட்டது. ஆனால், பட வேலைகள் துவங்கிய 10 நாட்களிலேயே அப்படம் நின்றுபோனது.
வடிவேலுவிற்கும், இயக்குநருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையே அப்படம் பாதியில் நிற்கக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் அப்படத்திற்காக போடப்பட்ட பலகோடி ருபாய் மதிப்புள்ள செட் வீணானது.
அடக் கொடுமையே.. சின்னக் கவுண்டர் சீனை அப்படியே சுட்டுட்டீங்களேய்யா!

ஷங்கர் புகார்:
தனக்கு ரூ.9 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதனால் வடிவேலுவை யாரும் புதிய படத்தில் நடிக்க அணுகக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

பேய்மாமா பர்ஸ்ட் லுக்:
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடிவேலு நடிக்கும் புதிய படம் என பேய்மாமா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதில், அப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தில் வடிவேலுவின் தோற்றத்தையும் வெளியிட்டனர். இந்தத் தகவலால் வடிவேலு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதிய பிரச்சினை:
ஆனால், இந்தப் படத்திற்கும் தற்போது புதிய பிரச்சினை முளைத்துள்ளது. தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சக்தி சிதம்பரத்தை அழைத்துப் பேசி, பேய்மாமா படத்திற்கு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தை முடித்துக் கொடுத்தபிறகே வடிவேலு வேறு புதிய படங்களில் நடிக்கலாம் என தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

மீண்டும் சிக்கல்:
அதோடு, புதிய படத்திற்காக வடிவேலுவை அணுகிய சில இயக்குநர்களையும் தயாரிப்பாளர் சங்கத்தினர் அழைத்துப் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் வடிவேலு படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது, அவரது ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.