Don't Miss!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மிரட்டல்: தயாரிப்பாளர் கைது
ஏகப்பட்ட வெளி வராத படங்களைத் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள பாபு கணேஷ்கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்தவர் பாபு கணேஷ். சில படங்களில் நடித்துள்ளார்.பின்னர் தயாரிப்பாளராக மாறினார். பல படங்களுக்கு ஒரே நேரத்தில் பூஜை போட்டுகோலிவுட்டையே கலக்குவார். ஆனால் ஒரு படம் கூட முடிந்து வெளியே வந்ததாகவரலாறே கிடையாது.மும்தாஜை வைத்து மும்தாஜ் என்ற பெயரிலேயே ஒரு படத்தைத் தயாரித்தார்.ஆனால் பாபு கணேஷின் எண்ணத்தை அறிந்த மும்தாஜ் பாதியிலேயே படத்திலிருந்துவெளியேறினார்.
இதனால் கடுப்பான பாபு கணேஷ், கும்தாஜ் என்ற பெண்ணை அழைத்து வந்து ஒருபடத்தைத் தயாரித்தார்.
பின்னர் மந்த்ராவை தனக்கு ஜோடியாக்கி ஒரு படத்தை எடுத்தார். இதைத் தொடர்ந்துபல்வேறு படங்களைத் தயாரிப்பதாக பாபு கணேஷ் பெயரில் விளம்பரம் வந்துகொண்டே இருந்தது. ஆனால் ஒரு படம் வந்ததாக தெரியவில்லை.
இந் நிலையில் சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின்போது அவருக்கும்,பியாரிலால் என்ற தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சினை உருவானது. தனக்குஆதரவாக ஓட்டுப் போடாதது ஏன் என்று கேட்டு பியாரிலாலிடம் பாபு கணேஷ்தகராறு செய்தார். இதுதொடர்பாக மணலி காவல் நிலையத்தில் பியாரிலால் புகார்கொடுத்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், புளியந்தோப்பு பகுதியில் பியாரிலால் காரில் போய்க்கொண்டிருந்தார். அப்போது அங்கே பாபு கணேஷ் சிலருடன் வந்து காரை மறுத்துபியாரிலாலை மிரட்டியுள்ளார். எங்கிருந்தோ வந்த நீ என்னை எதிர்க்கிறாயா, எனக்குஎதிராக புகார் கொடுக்கிறாயா, இப்படியே போனால் உன்னைத் தொலைத்துக் கட்டிவிடுவேன் என பாபு கணேஷ் மிரட்டியதாகத் தெரிகிறது.
அரண்டு போன பியாரிலால் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இதையடுத்து துணை ஆணையர் சம்பத், உதவி ஆணையர் சந்திரன் ஆகியோர் பாபுகணேஷை அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் இறுதியில் அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் வந்தகூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.