Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மாநாட்டில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளாரா சிம்பு...தயாரிப்பாளர் சொன்ன சுவாரஸ்ய தகவல்
சென்னை : இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று சிம்பு நடித்துள்ள மாநாடு. இந்த படம் உலகம் முழுவதும் நவம்பர் 25 ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய டிரைலர் ஒன்றை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
Recommended Video
இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.
ஸ்மார்ட்டாக மாறிய சிம்பு... புகைப்படங்கள் வெளியிட்டு உற்சாகம்
மாநாட்டிற்கு யு/ஏ சான்று
இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மாநாடு படத்தின் ப்ரோமோஷன் வேலைகள், டிக்கெட் புக்கிங் ஆகியன ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்று வழங்கி உள்ளது.
இரட்டை வேடத்தில் நடித்துள்ளாரா சிம்பு
இந்நிலையில் இந்த படத்தில் வரும் அரசியல் தொடர்பான காட்சிகளில் சிம்பு இரண்டு விதமாக தோற்றமளிக்கிறார். இதனால் மாநாடு படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்துள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த சந்தேகம் ரசிகர்களின் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் அதிகரிக்க வைத்துள்ளது.
தயாரிப்பாளர் சொன்ன தகவல்
இது பற்றி விசாரித்ததில், இந்த படத்தின் டைரக்டரான வெங்கட் பிரபு, ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காக ஒரு வருடத்திற்கு முன்பே இது போல் ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டாராம். இது பற்றிய சுரேஷ் காமாட்சியிடம் கேட்ட போது, மாநாடு படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை. அதே சமயம் வெங்கட் பிரபு மற்றும் சிம்புவின் பிரம்மாண்ட கம் பேக்காக இருக்கும் என்று மட்டும் கூறி சன்பென்ஸ் வைத்துள்ளார்.
சர்பிரைஸ் இருக்குமா
ஆனால் பல தடைகளை தாண்டி மாநாடு படம் ரிலீசிற்கு தயாராகி உள்ளதால், ரசிகர்களுக்கு சர்பிரைஸ், அவர்களின் காத்திருப்பிற்கும் உற்சாகம் தரும் வகையில் பல சுவாரஸ்யங்களை படத்தில் சேர்த்திருக்கலாம் என கூறப்படுகிறது. படம் ரிலீசாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் சிம்புவின் ரோல் பற்றி தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.