Don't Miss!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவ கொலை: கோமாவுக்கு சென்ற பிரவீனின் மனைவி! ஷர்மி தற்கொலைக்கு யார் காரணம்?
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகர் விமல் நடிக்கும் படத்தை தயாரிக்கிறவங்க என் ஆலோசனைய கேளுங்க... தயாரிப்பாளர் திடீர் அறிக்கை
சென்னை: நடிகர் விமல் தனது கடனை திருப்பித் தரவில்லை என்பதால் அவரை வைத்து படம் தயாரிப்பவர்கள் தன்னிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என்று அரசு பிலிம்ஸ் கோபி தெரிவித்துள்ளார்.
விமல் ஹீரோவாக நடித்த படம் மன்னர் வகையறா. ஆனந்தி, சாந்தினி, பிரபு, சரண்யா உட்பட பலர் நடித்திருந்தனர்.
பூபதி பாண்டியன் இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்திருந்தனர்.
திருப்பித் தரவில்லை
கடந்த 2018 ஆம் ஆண்டு படம் வெளியாகி இருந்தது. ஏ3வி சினிமாஸ் சார்பில் நடிகர் விமல் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். இந்தப் படத்துக்காக நடிகர் விமல், அரசு பிலிம்ஸ் தயாரிப்பாளர் கோபியிடம் ஐந்து கோடியே முப்பத்தைந்து லட்சம் கடனாக பெற்றிருந்தாராம். ஆனால், இந்தப் பணத்தை அவர் திருப்பித்தரவில்லை என்று கூறப்படுகிறது.
மன்னர் வகையறா
இந்நிலையில் அரசு பிலிம்ஸ் கோபி தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் விமல் தயாரித்து நடித்த மன்னர் வகையறா படத்துக்கு அவர் கேட்டுக் கொண்டதால், ஐந்து கோடியே முப்பத்தைந்து லட்சம் கடனாகக் கொடுத்திருந்தேன்.
உத்தரவாதம்
படம் வெளிவந்து நான்கு மாதங்களுக்கு பிறகு, ரூ.1 கோடியே 35 லட்சம் மட்டும் திருப்பிக் கொடுத்தார். மீதித் தொகையை படத்தில் நடித்து கிடைக்கும் சம்பளத்தின் மூலம் திருப்பித் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தார். அதை நம்பி நானும் பொறுமையாக இருந்து வருகிறேன். ஆனால், மன்னர் வகையறா படத்துக்குப் பிறகு ஏழு படங்களில் நடித்துவிட்டு, எந்தப் பணத்தையும் திருப்பித்தரவில்லை.
ஆலோசனை
நீதிமன்றத் தீர்ப்பின்படி, எனது என்.ஓ.சி இல்லாமல், எந்த படத்தையும் வெளியிட முடியாது என்பதால் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் தயாரிப்பில் ஈடுபட உள்ளவர்களும் என்னை அணுகி ஆலோசனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.