Don't Miss!
- News பேராசான் பெரியார் மண்ணில் இருந்து.. இன்று பிரசாரத்தை தொடங்கும் முன்னரே சரவெடி கொளுத்திய கமல்ஹாசன்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
என் படத்துக்கு டைட்டிலை மாத்தி அவங்க ரிலீஸ் பண்ணப்போறாங்க... - 'சீமத்துரை' மீது தயாரிப்பாளர் புகார்
சென்னை : கீதன், வர்ஷா பொல்லம்மா, விஜி சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'சீமத்துரை'. புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் சுஜய் கிருஷ்ணா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். சந்தோஷ் தியாகராஜன் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இப்படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான இமானுவேல் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் "சீமத்துரை என உருவாகியிருப்பது என்னுடைய படம். எனது படத்துக்கு டைட்டிலை மட்டும் மாற்றி சீமத்துரை என்ற பெயரில் வெளியிடுகிறார்கள்" என்று மோசடி புகார் கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்துள்ள புகார் மனுவில், "தயாரிப்பாளர் சுஜய் கிருஷ்ணா என்பவர் என்னை அணுகி நான் ஒரு படம் தயாரிக்கப்போகிறேன். என்னால் முழு பணமும் போடமுடியாது இருவரும் இணைந்து தயாரிப்போம் என்று அழைத்தார். அவரை நம்பி ஐ.ஜி.ஜே என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சீமானின் சீமாட்டி என்ற பெயரில் படம் தயாரித்தோம்.
இதற்காக நான் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்தேன். ஆனால் தயாரிப்பாளர் சுஜய் கிருஷ்ணாவும், இயக்குனர் சந்தோஷ் தியாகராஜனும் என்னை விரட்டிவிட்டார்கள். படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு என்னை அடியாட்களுடன் வந்து மிரட்டிச் சென்றார்கள்.
தற்போது படத்தின் பெயரை 'சீமத்துரை' என்று மாற்றி அவர்கள் மட்டுமே தயாரித்த படம் போன்று புதிய நிறுவனத்தின் பெயரில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். எனக்கு கொலை மிரட்டலும் விடுக்கிறார்கள். அவர்களைக் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார் இமானுவேல்.