நாளை தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்... பரபரப்பில் திரையுலகம்!

கடந்த வாரம் நடப்பதாக இருந்த இந்தக் கூட்டம், தள்ளி வைக்கப்பட்டு, நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் கே.முரளிதரன் ஆகிய இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், "கடந்த 4-ந் தேதி நடப்பதாக அறிவித்திருந்த பொதுக்குழு கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
ஆனால் நேற்று கூடிய தயாரிப்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தயாரிப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10-30 மணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில், தயாரிப்பாளர்களின் சிறப்புக்கூட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
அந்த கூட்டத்தில், வருகிற அக்டோபர் மாதம் 9-ந் தேதி நடப்பதாக முடிவெடுக்கப்பட்ட சங்க தேர்தலை நடத்துவதற்கு, தேர்தல் அதிகாரியை நியமிப்பது பற்றியும், மற்றும் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன.
முக்கியமாக சிறப்பு கூட்டத்துக்கு வருகிற நிரந்தர உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் அடையாள அட்டையுடன் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்,'' என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











