twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாளை தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்... பரபரப்பில் திரையுலகம்!

    By Shankar
    |

    Tamil Film Producers Council Press Meet
    சென்னை: சினிமா தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை, பெப்சி - பிலிம் சேம்பர் மோதல், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கான போட்டி என பல்வேறு சிக்கல்கள் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூடுகிறது.

    கடந்த வாரம் நடப்பதாக இருந்த இந்தக் கூட்டம், தள்ளி வைக்கப்பட்டு, நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

    இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் கே.முரளிதரன் ஆகிய இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், "கடந்த 4-ந் தேதி நடப்பதாக அறிவித்திருந்த பொதுக்குழு கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.

    ஆனால் நேற்று கூடிய தயாரிப்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தயாரிப்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10-30 மணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில், தயாரிப்பாளர்களின் சிறப்புக்கூட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

    அந்த கூட்டத்தில், வருகிற அக்டோபர் மாதம் 9-ந் தேதி நடப்பதாக முடிவெடுக்கப்பட்ட சங்க தேர்தலை நடத்துவதற்கு, தேர்தல் அதிகாரியை நியமிப்பது பற்றியும், மற்றும் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன.

    முக்கியமாக சிறப்பு கூட்டத்துக்கு வருகிற நிரந்தர உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் அடையாள அட்டையுடன் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்,'' என்று கூறியுள்ளனர்.

    English summary
    Tamil cinema producers council meeting will be held tomorrow (Sunday) in Chennai to discuss various issues.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X