Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புயல் நிவாரண நிதியாக 25 லட்சம்: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழ் பெயர்களை கொண்ட 'யு சான்றிதழ்' பெற்ற படங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா சில விதிமுறைகளுடன் வரிவிலக்கு அளித்துள்ளார்.
இதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக, முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைய நடைமுறையில், 5 அல்லது 6 சதவீத படங்களை தவிர, மீதி படங்கள் அத்தனையும் தோல்வி அடைகின்றன.
தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே திரைப்பட தொழிலாளர்களுடன் ஊதிய பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இருக்கிறோம்.
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை. எனவே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்.
இதற்காக பட அதிபர்கள் கேயார், ஹென்றி உள்பட 15 பேர்களை கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். பேச்சுவார்த்தை முடியும் வரை, எந்த தயாரிப்பாளரும் தற்போதைய சம்பளத்தை தவிர, கூடுதலாக சம்பளம் கொடுக்கக் கூடாது. மீறி, கூடுதல் சம்பளம் கொடுத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பேச்சுவார்த்தை முடியும் வரை, தொழிலாளர்கள் பழைய சம்பளத்தை பெற்றுக்கொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
செலவைக் குறைங்க...
பட தயாரிப்பு செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து திரைப்பட அமைப்புகளுக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். ரூ.10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
100 நாட்கள், 200 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
ரூ 25 லட்சம் நிதி உதவி
சமீபத்தில் வீசிய தானே புயலால் கடலூர் சுற்று வட்டாரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புயல் நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்தை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வழங்க இருக்கிறோம்", என்றார்.
-
Actor Ajith: அஜித் பிறந்தநாளில் காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட்.. காத்திருக்கும் ரசிகர்கள்!
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!