Don't Miss!
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சர்கார் பிரச்சனை… ரசிகர்கள் குறித்து வேதனையடைந்த தயாரிப்பாளர் சிவி குமார்!
சர்கார் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சிவி குமார் வேதனையடைந்துள்ளார்
Recommended Video
சென்னை: தனக்கான தலைவனை திரையில் மட்டுமே தேடும் சமூகம் கட்டமைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சிவி.குமார் வேதனை தெரிவித்துள்ளார்.
பீசா, தெகிடி, அட்டகத்தி, காதலும் கடந்துபோகும் என் பல படங்களை தயாரித்து புதுய இயக்குனர்களை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய நல்ல தயாரிப்பாளர் சிவி.குமார். தற்போது காதலும் கவுந்துபோகும் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
சர்கார் பட பிரச்சனை முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், தனக்கான தலைவனை திரையில் தேடும் சமூகத்தை அனைவரும் உருவாக்குகிறார்கள் என்று வேதனையடைந்துள்ளார்.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "ஒரு திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்க்கத் தெரியாத ஒரு சமூகம் தன் பிரச்சனைகளுக்கான தீர்வை, தன் தலைவனை திரையில் மட்டுமே தேடும். அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை இங்கு தொடர்ந்து கட்டமைத்து கொண்டிருக்கிறார்கள் அனைவரும்..." என பதிவிட்டுள்ளார்.
அரசின் இலவச திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலவச பொருட்களை முருகதாஸ் உள்ளிட்டோர் தீயிலிடுவதாக காட்சி அமைக்கப்பட்டிருந்ததால்தான் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதனால் குறிப்பிட்ட சில காட்சிகள் நீக்கப்பட்டு படம் மறுதணிக்கை செய்யப்பட்டது.
ஓரு திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்க்க தெரியாத ஓரு சமூகம் தன் பிரச்சனைகளுக்கான தீர்வை , தன் தலைவனை திரையில் மட்டுமே தேடும். அப்படிபட்ட ஓரு சமூகத்தையே இங்கு தொடர்ந்து கட்டமைத்து கொண்டிருக்கிறார்கள் அனைவரும்....
— C V Kumar (@icvkumar) November 9, 2018
இதனையடுத்து சர்கார் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் அரசினால் வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர், சைக்கிள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை எரிப்பது போல மியூசிக்கலி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்பட்ட இலவசப் பொருட்களை சேதப்படுத்துவதால் யாருக்கு என்ன லாபம்? இனிமேல் இலவசங்களை வாங்கக்கூடாது என்பதை சொல்வதற்குத் தானே படத்தில் காட்சிகள் அமைக்கபட்டது. அதுகூட விஜய் ரசிகர்களுக்கு புரியவில்லையே என சமூக வலைதளங்களில் பலர் ஆதங்கப் படுவதையும் பார்க்க முடிகிறது.