Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பொன்னியின் செல்வன் படத்தோட மோத இதுதான் காரணம்.. உண்மையை உரக்க சொன்ன தாணு!
சென்னை : நடிகர் தனுஷ் நல்லவராகவும் கெட்டவராகவும் இருவேறு வேடங்களில் நடித்துள்ள படம் நானே வருவேன்.
இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு தன்னுடைய அண்ணன் செல்வராகவனுடன் இணைந்துள்ளார் தனுஷ்.
தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் கொடுத்த அதிரி புதிரி வெற்றியை தொடர்ந்து நானே வருவேன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்..ஒருவேளை அந்த நடிகையா இருக்குமோ?
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அவரது 4 படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியான நிலையில், ரசிகர்கள் வெறுத்துத்தான் போனார்கள். இதையடுத்து கடந்த மாதத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகி அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.
திருச்சிற்றம்பலம் படம்
இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவரும் போட்டிப் போட்டு நடித்திருந்தனர். இருவரது நடிப்பும் இயல்பாக கதைக்கு தேவையான அளவில் அமைந்திருந்தது. மேலும் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்களும் படத்திற்கு வலு சேர்த்திருந்தனர்.
அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷின் நானே வருவேன், வாத்தி போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. குறிப்பாக தன்னுடைய சகோதரருடன் நீண்ட காலங்களுக்கு பிறகு தனுஷ் இணைந்துள்ள நானே வருவேன் படம் இந்த மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் சில தினங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது.
பொன்னியின் செல்வனுடன் மோதல்
இந்தப் படம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்துடன் மோதவுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் குறித்த தனது பேட்டியில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மனம் திறந்துள்ளார். இந்த ஆயுதபூஜை பண்டிகைக்கான விடுமுறையை தான் மிஸ் செய்ய விரும்பவில்லை என்றும் இதேபோல தான் தான் அசுரன் படத்தையும் ரிலீஸ் செய்தாகவும் தெரிவித்துள்ளார்
தயாரிப்பாளர் தாணு விளக்கம்
ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசானாலும் அந்தந்த படங்களின் தகுதிக்கேற்ப அந்தப் படங்கள் சிறப்பான வரவேற்பை பெறும் என்றும் தெரிவித்துள்ளார். படத்தின் காப்பி உருவாகும்வரை தான் காத்திருந்ததாகவும் சென்சார் அனுப்பிவிட்டே தான் படத்தின் அறிவிப்பை மேற்கொண்டதாகவும் அதனால்தான் படத்தின் அறிவிப்பு தாமதமானதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.