Don't Miss!
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'அரண்மனை- 2'க்கும் சிக்கல்... தடை கோரி வழக்கு... சமரச மையத்தில் போய்ப் பேசுங்க.. நீதிபதி உத்தரவு
சென்னை: சுந்தர்.சி. இயக்கியுள்ள அரண்மனை - 2 படத்துக்கு தடை விதிக்கக்கோரி தயாரிப்பாளர் முத்துராமன் சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு சுந்தர்.ஜி இயக்கத்தில் வெளியான பேய்ப்படம் அரண்மனை. ஹன்சிகா, ராய் லட்சுமி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடியது.
முன்னதாக அரண்மனை படம் ரஜினி நடித்த தனது ஆயிரம் ஜென்மங்கள் கதையை ஒத்திருப்பதாகக் கூறி, அப்படத்திற்கு தடைவிதிக்கக் கோரி தயாரிப்பாளர் முத்துராமன் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு பல மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது
அரண்மனை -2...
இந்நிலையில், தற்போது அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. இப்படத்தில் சித்தார்த், திரிஷா, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் வெள்ளியன்று ரிலீசாக உள்ளது.
புதிய வழக்கு...
தற்போது இந்தப் படத்திற்கு தடை விதிக்கக்கோரி மீண்டும் தயாரிப்பாளர் முத்துராமன் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
விரைவில் ரிலீஸ்...
அந்த மனுவில் அவர், ‘‘அரண்மனை-2' என்ற பெயரில் ஒரு படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். விரைவில் அப்படம் திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த், நடிகைகள் ஹன்சிகா, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆயிரம் ஜென்மங்கள்...
என்னுடைய ‘ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் கதை அடிப்படையில்தான் இந்தப் படமும் உருவாகியுள்ளது. என் அனுமதியின்றி இந்தப் படத்தையும் சுந்தர்.சி இயக்கியுள்ளார். எனவே. ‘அரண்மனை-2' படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு உத்தரவு...
இந்த மனு, நீதிபதி டேனியல் அரிபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘‘இதுதொடர்பாக மனுதாரரும், எதிர் மனுதாரரும் சமரச தீர்வு மையத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வரும் 28-ம் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையும் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.