Don't Miss!
- Sports எத்தனை விக்கெட் போனாலும் சரி.. கதறவிட்ட குஜராத் டைட்டன்ஸ்.. கதிகலங்கிப் போன டெல்லி கேபிடல்ஸ்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
படப்பிடிப்பிலிருந்து ஓட்டம்: நடிகை சந்தியா, இயக்குநர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!
சென்னை: படப்பிடிப்பிலிருந்து ஓட்டம் பிடித்து தனக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக நடிகை சந்தியா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் எழில் இனியன் மாயை என்ற படத்தை தயாரித்தார். ஜே.ஆர்.கண்ணன் இயக்கினார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது, சந்தியா திடீரென காணாமல் போய்விட்டாராம். இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
இதுகுறித்து எழில் இனியன் கூறுகையில், "சென்னை புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் 'சை' என்ற படத்தை தயாரித்து கதாநாயகியின் தந்தையாகவும் நடித்தேன். பிறகு படத்தின் பெயர் 'மாயை' என மாற்றப்பட்டது.
படப்பிடிப்பு மற்றும் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் முடிந்த பிறகு கதாநாயகி தனம் நன்றாக நடிக்கவில்லை என்று இயக்குனர் கண்ணன் கூறினார். அவருக்கு பதில் சந்தியாவை ஒப்பந்தம் செய்து மீண்டும் படப்பிடிப்பை துவக்கினார்.
ஊட்டியில் படப்படிப்பு தொடங்கியது. அங்கு வந்த சந்தியா தனக்கு கொடுத்த கவர்ச்சி உடையை அணிய மறுத்தார். இதுபோன்ற ஆடை உடுத்தி தன்னால் நடிக்க முடியாது என்று கூறி விட்டு கிளம்பி போய்விட்டார். முதலிலேயே சந்தியாவிடம் காஸ்ட்யூம் பற்றி சொல்லாமல் அழைத்து வந்தது டைரக்டர் செய்த தப்புதான். இதனால் படப்பிடிப்பு நின்று நஷ்டம் ஏற்பட்டது. நடிகை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்திருக்கலாம். அவர் கொஞ்சமும் யோசிக்காமல் ஓடிவிட்டார்.
இயக்குநருடன் தகராறு
எனக்கும் டைரக்டர் கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டதால் ரூ. 24 லட்சம் பெற்றுக் கொண்டு படத்தில் இருந்து விலகி விடும்படி டைரக்டர் கண்ணன் தெரிவித்தார். நான் சம்மதித்தேன். அட்வான்சாக ரூ. 2 லட்சம் தந்தார். மீதி பணத்தை படம் ரிலீசுக்கு முன் தருவதாக கூறினார். ஆனால் பணத்தை தராமலேயே படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளேன்," என்றார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!