Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'ஷோ காட்டுற பெண்களுக்கு எச்சரிக்கை..' - பொங்கி எழுந்த தயாரிப்பாளர் மனைவி!
சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், சூர்யாவின் குடும்ப நண்பருமானவர் ஸ்டூடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா.
அவரது மனைவி நேஹா ஞானவேல்ராஜா, நடிகைகளைப் பற்றி பதிவிட்ட ட்வீட்டுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.
அந்த ட்வீட்டுகளை நீக்கிவிட்ட நேஹா, அதற்கு விளக்கம் அளித்தும், நடிகைகளுக்கு எச்சரிக்கை விடுத்தும் இன்னொரு ட்வீட் செய்திருக்கிறார்.
தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஸ்டூடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா. அவருடைய மனைவி நேஹா ஞானவேல் ராஜா, சூர்யாவின் 'சிங்கம் 3' படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்தவர்.
நேஹா ஞானவேல்ராஜா
நேஹா ஞானவேல்ராஜா, நடிகைகளைப் பற்றி பதிவிட்ட சில ட்வீட்டுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. "சில நடிகைகள் குடும்பத்தை உடைப்பவர்கள், அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள். சில நடிகைகள் திருமணமான ஆண்களைத்தான் குறி வைக்கிறார்கள்.
சர்ச்சை ட்வீட் நீக்கம்
படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்கும் தயாராக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய பட்டியலை வைத்திருக்கிறேன். விரைவில் அவர்களை வெளியேற்றுவேன்" என பதிவிட்டார். இது சர்ச்சையானதை தொடர்ந்து ட்வீட்டுகளை நீக்கிவிட்டார் நேஹா. அதன் பின் அதற்கான விளக்கத்தைக் கொடுத்து இன்னொரு ட்வீட் செய்திருக்கிறார்.
|
என் கணவருக்கு பிரச்னை இல்லை
"நான் பதிவிட்டது, என்னுடைய பிரச்னை அல்ல. எனக்கும், என் கணவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அது என்னைச் சுற்றி பலருக்கு நடக்கும் விஷயங்கள். சில நடிகைகள் திருமணமானவர்களின் வாழ்க்கையுடன் தொடர்ந்து விளையாடுகிறார்கள்.
கவன ஈர்ப்புக்கு அல்ல
ஒரு பெண் இதைப் பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசினால், அதை எல்லோரும் 'லீக்' என்கிறார்கள். இங்கு கவனத்தை ஈர்க்க நான் இல்லை. எனது கணவரைப் பற்றி எனது ட்வீட்டுக்கு வரும் சில கமெண்ட்டுகள் என்னை பாதிக்கிறது. அதனால் அவற்றை நீக்குகிறேன்.
எச்சரிக்கை
சென்சிட்டிவ்வான பிரச்னைகளைப் புரிந்துகொண்டு அவற்றை நீக்குகிறேன். ஆனால், இப்படி ஷோ காட்டும் பெண்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாக போய்ச் சேரும். சமூக வலைதளம் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. எனவே, நல்ல வழியில் ஆதரவு கொடுங்கள்" என பதிவிட்டுள்ளார் நேஹா.