Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வரி ஏய்ப்பா? வரியை ஏய்க்கவும் இல்ல மேய்க்கவும் இல்ல.. சேனல்கள் மீது பாய்ந்த தயாரிப்பாளர் வொய்ஃப்!
சென்னை: எக்மோர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது தொடர்பாக செய்தி வெளியிட்ட சேனல்களை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி விளாசியிருக்கிறார்.
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகர் சூரியாவின் உறவினருமான ஞானவேல்ராஜா, தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து, குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதற்காக கேள்விகளை கேட்டு பதிவு செய்யும் நடைமுறைக்காக ஞானவேல்ராஜாவை ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
கோரிக்கை
பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
பிடிவாரண்ட்
இதை ஏற்றுக் கொண்ட எழும்பூர் நீதிமன்றம் கடந்த திங்கள் கிழமை ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதுதொடர்பான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
|
வரி ஏய்ப்பு புகாரா?
இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்களை கடுமையாக விமர்சித்திருக்கிறார் ஞானவேல் ராஜாவின் மனைவி நேகா. இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், வரி ஏய்ப்பு புகாரா? வரியை ஏய்க்கவும் இல்ல.. மேய்க்கவும் இல்ல.. அரைவேக்காட்டுத்தனமான செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் அவற்றைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுபவர்கள். இதுல பிடிவாரண்ட் வேற.. ஸ்ப்பா.. முடியல என பதிவிட்டிருக்கிறார்.
|
வேண்டும் என்றே..
அவரின் இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள் சிலர் சூர்யாவுடன் தொடர்புடையவர்களை ட்ரோல் செய்ய இதுபோன்று செய்கிறார்கள். இதை வேண்டுமென்றே செய்கிறார்கள் என கூறியுள்ளனர்.
|
ஏன் கோர்ட்டுக்கு வந்தார்?
அதே நேரத்தில் அவர் ஏன் கோர்ட்டில் ஆஜாரானார் என்றும் சில நெட்டிசன்கள் ஞானவேல் ராஜாவின் மனைவியை கேட்டு வருகின்றனர்.