Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
காதல் மனைவி மகாலட்சுமியை பரிசு மழையில் நனையவைத்த ரவீந்திரன்..பரிசுகள் என்னென்ன தெரியுமா?
சென்னை : நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க என்று பாட்டு பாடி ஆட்டம் போடாத குறையாக தயாரிப்பாளர் ரவீந்திரனும் மகாலட்சுமியும் செய்யும் அலப்பறை தாங்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்தாலும் செய்தார்கள் பல யூடியூப் சேனல்கள் இவர்களிடம் விதவிதமான கேள்விகளை கேட்டு இவர்கள் இருவரையும் இன்டர்நேஷனல் லெவலுக்கு டிரெண்டாக்கி விட்டார்கள்.
நித்தம் ஒரு புதுதகவல் என்பது போல, ரவீந்திரன் தனது காதல் மனைவிக்கு வாங்கி கொடுத்த பரிசுகள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
நிர்வாணமாக கதறி அழும் இளம் பெண்கள்… டுபாக்கூர் டைரக்டரிடம் சிக்கிய ஆபாச வீடியோக்கள்
ரவீந்திரன், மகாலட்சுமி
தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமிக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 1ந் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களின் திருமணம் மிகவும் சீக்ரெட்டாக நடந்தது. இன்ஸ்டாகிராம் திருமண புகைப்படத்தை இவர்கள் ஷேர் செய்த பின்பே இவர்களுக்கு திருமணமான செய்தி அனைவருக்கும் தெரிந்தது.
ஜாலியாக பேட்டி
திருமண முடிந்த கையோடு மகாபலிபுரத்தில் உள்ள ரெஸ்டாரண்டில் ஹனிமூன் கொண்டாடிய இவர்கள் அடுத்தடுத்து பல சேனல்களுக்கு ஜோடியாக சென்று பேட்டி கொடுத்து வருகின்றனர். இணையத்தில் இவர்கள் இருவரும் பணத்திற்காகத்தான் திருமணம் செய்து கொண்டார் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், அதைபற்றி கவலைப்படாமல் ஜாலியாக பேட்டி கொடுத்து வருகின்றனர்.
மாதா மாதம் பரிசு
சமீபத்தில் பேட்டி ஒன்றில், நயன்தாராவை பார்த்து அவரைப்போலவே தன்னுடைய மனைவி மகாலட்சுமியும் மஞ்சள் கயிற்றை வெளியில் தொங்க விடுறா இவ பண்ற அலப்பறை தாங்கமுடியவில்லை என்றார்.மேலும், நாங்கள் இருவரும் காதலிக்க துவங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த ஒன்றரை ஆண்டுகளில் மகாலட்சுமி தனது காதலை சொன்ன அந்த தேதியில் மாதம் மாதம் ஏதாவது ஒரு பரிசை வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். ஆனால் இதுவரை நான் அவருக்கு எந்த பரிசையும் வாங்கி கொடுக்கவில்லை என கூறியிருந்தார்.
காதல் மனைவிக்கு பரிசு
இதை பூர்த்தி செய்யும் வகையில் தனது காதல் மனைவி மகாலட்சுமிக்கு பல பரிசுகளை கொடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் தனிபங்களாவும், அந்த பங்களாவில் தனியாக நீச்சளம், தேக்கு மரத்தால் இழைக்கப்பட்ட இன்டீரியர் டெக்கரேஷன் கூடிய பங்களாவாம் அந்த பங்களாவின் மதிப்பே பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தங்கத்தில் கட்டிலா?
மேலும் விதவிதமான கலரில் 300க்கும் மேற்பட்ட பட்டுபுடவைகள், தங்க ஆபரணங்கள் என பரிசு மழையால் மனைவியை குஷிப்படுத்தி உள்ளார் ரவீந்திரன். கொஞ்சம் ரொமான்ஸா யோசித்த ரவீந்திரன் தங்கத்தால் இழைக்கப்பட்ட கட்டிலை பரிசாக கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால், இந்த தகவல் எவ்வளவு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. இந்த தகவலை கேட்டு ரசிகர்கள் வாய்பிளந்துள்ளனர்.இது எப்படியோ ஹாப்பி மேரேஜ் லைஃப்.