Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அனுபவக் குறைபாட்டால் நடந்த சிறுதவறு.. பெரிதுபடுத்தாதீர்கள்.. அஷ்வினுக்கு பிரபல தயாரிப்பாளர் ஆதரவு!
சென்னை: நடிகர் அஷ்வின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபல தயாரிப்பாளர் அவருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஷ்வின். என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அஷ்வின், கதை நல்லா இருந்தால் தூங்கிடுவேன் என்று கூறினார்.
விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் எப்போது ரிலீஸ் ஆகிறது தெரியுமா... சூடான அப்டேட்!
அஷ்வினுக்கு கடும் கண்டனம்
மேலும் இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி இருக்கிறேன் என்றும் படம் நல்லா இல்லை என்றால் ரிலீஸ் பண்ண மாட்டேன் என்றும் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்னும் ஒரு படம் கூட அவரது நடிப்பில் ரிலீஸ் ஆகாத நிலையில் இந்த பேச்சு தேவைதானா என்று பலரும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கனவில் கூட நினைக்கவில்லை
சமூக வலைதளங்களிலும் இதுதொடர்பாக பல மீம்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தனது பேச்சு குறித்து மீடியாக்களுக்கு விளக்கம் கொடுத்தார் அஷ்வின். அதில், இது தான் எனக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பு. அத்தனை பெரிய இசை வெளியீட்டு விழா மேடையை இதுவரை கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாது.
பதற்றத்தில் பேசி விட்டேன்
மேடையில் நிற்கும் போது பெரும் பதற்றமாகி விட்டது. அந்த பதற்றத்தில் தான் அப்படி பேசி விட்டேன். இதுவரை நான் 40 கதைகள் கேட்டதே இல்லை. அடித்துவிடுவோம் என பேசி விட்டேன். அந்த பேச்சு இந்த அளவுக்கு எனக்கே பின் விளைவுகளை கொடுக்கும் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று விளக்கம் கொடுத்தார் அஷ்வின்.
அனுபவக் குறைபாட்டால் நடந்த தவறு
இந்நிலையில் அஷ்வினுக்கு பிரபல தயாரிப்பாளரான எஸ்ஆர் பிரபு ஆதரவு தெரிவித்துள்ளார். அனுபவக் குறைப்பாட்டால் அஷ்வின் அப்படி பேசிவிட்டார் என்றும் அதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு. பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக. அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்! என குறிப்பிட்டுள்ளார்.