Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
மத்திய அரசோ… மாநில அரசோ… யார் படமும் வேண்டாம்... எஸ்.ஆர்.பிரபு ஆவேசம் !
சென்னை : மத்திய அரசோ, மாநில அரசோ தடுப்பூசியில் யாரு படமும் இடம் பெற வேண்டாம் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கூறியுள்ளார்.
அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படம் இடம் பெற்று வருகிறது.
தாலிய விட தங்கம் தான் முக்கியமா போச்சா? கடைகளில் முண்டியடித்த கூட்டம்.. நடிகை கஸ்தூரி விளாசல்!
இது தொடர்பான சர்ச்சை செய்திகள் கடந்த சில நாட்களாக பரவி வரும் நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரவு தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக வேகப்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசியே கொரோனாவை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. 2வது கட்டமாக 60 வயதை கடந்தவர்களுக்கு போடப்பட்டு, தற்போது 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது
தடுப்பூசி சான்றிதழ்
அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அதற்கான தடுப்பூசி சான்றிதழ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், ஒருங்கிணைந்து இந்தியா கொரோனாவை வெல்லும் என்ற வாசகமும் அந்த சான்றிதழில் இடம்பெற்றுள்ளது.
சான்றிதழில் படங்கள்
ஆனால் மாநில அரசுகள் தங்கள் நிதியில் வாங்கும் தடுப்பூசிகளில் இனிமேல் மாநில முதல்வர்களின் படங்களே இடம் பெற வேண்டும் எனற் கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. இது தொடர்பான சர்ச்சைக்கள் கடந்த சில நாட்களாக பரவி வருகின்றன.
யார் படமும் வேண்டாம்
இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தடுப்பூசி யாருக்கு போடுறாங்களோ அவங்க படத்த சான்றிதழ்ல போடுங்கப்பா, இன்னும் அதிக நம்பத்தன்மையுடனாவது இருக்கும், மத்திய அரசோ, மாநில அரசோ எல்லாம் மக்கள் பணத்துலதானே ஊசி மருந்து எல்லாம் வாங்குறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.