Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அந்த மாதிரி கதைகளை எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்... தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வேண்டுகோள்!
சென்னை : தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்.
கடைசியாக இந்த நிறுவனம் கார்த்தியின் கைதி மற்றும் சுல்தான் ஆகிய படங்களை தயாரித்து இருந்தது.
அமைதியைத் தகர்த்தெறியுங்கள்… பெண்களுக்கு ஜோதிகா அட்வைஸ் !
இப்பொழுது தெலுங்கு நடிகர் சர்வானந்த் நடிக்கும் ஓகே ஓக ஜீவிதம் என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த மாதிரி கதைகளை எழுதுவதை நிறுத்துங்கள் என தமிழ் இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெற்றியுடன் கூடிய வசூலை
கார்த்தியின் சகுனி படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு. மிகக்குறைந்த பட்ஜெட்டில் படங்களை இயக்கி வெற்றியுடன் கூடிய வசூலையும் அள்ளி வரும் எஸ்ஆர் பிரபு இயக்கும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்று வருகிறது.
ஓகே ஓக ஜீவிதம்
ஜோக்கர்,காஷ்மோரா ,அருவி, கூட்டத்தில் ஒருத்தன், தீரன் அதிகாரம் ஒன்று ,என்ஜிகே, ராட்சசி, கைதி மாற்றம் கார்த்திக்கு கடைசியாக வெளியான சுல்தான் உள்ளிட்ட படங்களை எஸ் ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்பொழுது அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் சர்வானந்த் நடிப்பில் உருவாகும் ஓகே ஓக ஜீவிதம் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படம் தமிழில் கணம் என்ற பெயரில் தயாராகி வருகிறது.
ஒரே பேட்டனில் திரைப்படங்கள்
பெரும்பாலும் அறிமுக இயக்குனர்களின் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் கொண்ட எஸ்ஆர் பிரபு இப்பொழுது வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். என்னதான் தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருந்தாலும் அது எங்கேயோ பார்த்த கதை களத்தில் இருப்பது பலரும் அறிந்ததே. காதல்,ஆக்சன், ஹாரர் ,காமெடி மற்றும் சைக்கோ த்ரில்லர் என ஒரே பேட்டனில் திரைப்படங்கள் வெளியாகி கொண்டுள்ளது.
டெட் லஸ்ஸோ, செக்ஸ் எடுக்கேஷன்
எனவே அது போன்ற வழக்கமான கதைகளை எழுதுவதை முதலில் நிறுத்துங்கள். டெட் லஸ்ஸோ, செக்ஸ் எடுக்கேஷன் உள்ளிட்ட வெப்சீரிஸ் போல வித்தியாசமான கதைகளை எதிர்பார்க்கிறேன். எனவே சைக்கோ, ஹாரர், த்ரில்லர் போன்ற கதைகளை தமிழ் இயக்குனர்கள் எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்.
Recommended Video
எழுதுவதை முதலில் நிறுத்துங்கள்
புதிய மொழி புதிய கலாச்சாரம் மற்றும் பல்வேறு பண்பாடுகளை கொண்ட பல வித்தியாசமான கதைகள் இங்கு இருக்கு கூற . எனவே அது போன்ற படங்களை எடுங்கள் என தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.