Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எழுத்தாளர் ம.காமுத்துரை நாவல் சினிமாவாகிறது.. மீண்டும் படம் இயக்குகிறார் 'மாநாடு' தயாரிப்பாளர்!
சென்னை: 'மிக மிக அவசரம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் புதிய படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார் சுரேஷ் காமாட்சி.
அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களைத் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி.
மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்களின் ஹெச்.டி பிரின்ட் இணையத்தில் லீக்.. டெலிகிராமில் பறக்கும் லிங்க்!
தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் இவர் இப்போது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை தயாரித்து வருகிறார்.
அப்துல் காலிக்
வெங்கட்பிரபு இயக்கும் இதில், சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, எஸ்ஏசி, ஒய் ஜி மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே. பாரதி, பிரேம்ஜி, உதயா உட்பட பலர் நடிக்கின்றனர். இதில், அப்துல் காலிக் என்ற கேரக்டரில் நடிக்கிறார், சிம்பு.
நெற்றியில் புல்லட்
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. அந்த போஸ்டரில், முகத்தில் ரத்தம் வடிய, நெற்றியில் புல்லட் இருக்க, அமர்க்களமாகப் பார்க்கிறார் சிம்பு. அந்த போஸ்டரை சிம்பு ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.
மிக மிக அவசரம்
இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இப்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீண்டும் படம் இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே மிக மிக அவசரம் என்ற படத்தை இயக்கி இருந்தார். பெண் போலீஸ் பற்றிய இந்தப் படம் கவனிக்கப்பட்டது.
முற்றாத இரவொன்றில்
இதையடுத்து, பிரபல எழுத்தாளர் ம.காமுத்துரை எழுதிய 'முற்றாத இரவொன்றில்' என்ற நாவலைத் தழுவி படம் இயக்க இருக்கிறார். நாவலைப் படமாக்கும் உரிமையை ம.காமுத்துரையிடம் முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமாட்சி. தற்போது இதில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.