Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
அரசின் அதிரடி உத்தரவு.. ஒரு படைப்பாளியாக ரொம்பவே மகிழ்ச்சியடைகிறேன்.. சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சி!
சென்னை: முதல்வர் பாதுகாப்பு பணியில் ஈடுபட பெண் போலீஸாருக்கு விலக்கு அளித்ததற்காக தமிழக அரசுக்கு 'மிக மிக அவசரம்' படத்தின் இயக்குநர் சுரேஷ் காமாட்சி நன்றி கூறியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு சுரேஷ் காமாட்சி இயக்கி, தயாரித்து வெளியான படம் 'மிக மிக அவசரம்'. இந்தப் படம் பெண் போலீஸார் படும் இன்னல்களை பேசும் படமாக இப்படம் இருந்தது.
ஒரே ஒரு தொப்பி தான்.. ஆடையேதும் அணியாமல் ஒட்டுமொத்த ரசிகர்களை ஆட்டம் காண வைத்த பிரபல நடிகை!
இந்நிலையில் தமிழக அரசு முதல்வர் பாதுகாப்பு பணியில் பெண் போலீசாருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் விலக்கு அளித்து அறிவிப்பு வெளியிட்டார்.
மிக மிக அவசரம்
மிக மிக அவசரம் படத்திலும் ஒரு அரசியல்வாதிக்கு பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தப்பட்ட ஒரு பெண் காவலரின் போராட்டங்கள் சொல்லப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசின் அறிவிப்புக்கு, அப்படத்தின் இயக்குநரான சுரேஷ் காமாட்சி நன்றி தெரிவித்துள்ளார்.
சின்ன சிக்கல் பெரிய வலி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "பெண் போலீஸாரின் பெருந்துன்பங்களில் ஒன்று பிரபலங்கள் வரும்போது பாதுகாப்பிற்காகச் சாலைகளில் நிற்பது. அதிலென்ன இருக்கிறது எனச் சாதாரணமாகக் கடந்து போகும்போது, ஒரு சின்ன சிக்கல் எவ்வளவு பெரிய வலியையும் அவஸ்தையையும் தருகிறது என்பதை 'மிக மிக அவசரம்' படத்தில் சொல்லியிருந்தோம்.
பெருமை கொள்கிறேன்
ரொம்ப சின்ன கதைக் கருதான். ஆனால், அதன் பின்னிருந்த அழுத்தமான வலி பெரும் வெற்றியைத் தந்தது. திரையரங்கில் ஓடியதைவிட, இன்று இந்த அறிவிப்பால் உண்மையாகவே பெருமைகொள்கிறேன். மகிழ்கிறேன்.
முதல்வருக்கு நன்றி
பெண் போலீஸார் சாலையோரப் பாதுகாப்பில் ஈடுபட வேண்டாம் என அறிவித்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், டிஜிபிக்கும் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுரேஷ் காமாட்சி நன்றி
இப்படைப்பிற்கு கதை எழுதிய இயக்குநர் ஜெகன்னாத், நடித்த பிரியங்கா, அரீஷ் குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், இயக்குநர் சேரன், படத்தை வெளியிட்ட லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரன், இணைந்து தயாரித்த குங்ஃபூ ஆறுமுகம், ஒளிப்பதிவாளர் பாலபரணி, எடிட்டர் சுதர்சன், இசையமைப்பாளர் இஷான் தேவ், பிஆர்ஓ ஜான் அனைவருக்கும் நன்றிகள்.
பெருமை கொள்கிறேன்
படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் 'மிக மிக அவசரம்' படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமைகொள்கிறேன்". இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.