Don't Miss!
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நாங்க என்ன அவ்வளவு கேவலமா...சரண்யா பொன்வண்ணனை கிழி கிழி என கிழித்த தயாரிப்பாளர்!
சென்னை : அருவா சண்ட பட ப்ரோமோஷனில், கெஞ்சி கேட்டும் கலந்து கொள்ளாத சரண்யா பொன்வண்ணனை கிழி கிழி என கிழித்து பேசி உள்ளார் படத்தின் தயாரிப்பாளர் வி ராஜா.
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து ஹீரோவா நடித்துள்ள திரைப்படம் அருவா சண்ட.
சிலந்தி, ரணதந்த்ரா, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் டிசம்பர் 30ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
அருவா ப்ராஜெக்ட்டை மீண்டும் கையில் எடுக்கும் சூர்யா... வணங்கானை கைவிட இதுதான் காரணமா?
அருவா சண்ட
அருவா சண்ட படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சரண்யா பொன்வண்ணன் குறித்து ஆவேசமாக தயாரிப்பாளர் வி.ராஜா அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்துள்ளார். இதில், இந்த படத்தோட பலமே அவங்தான், ஹீரோயின்கூட கொஞ்சம்தான் இந்த படத்தோட, கதாநாயகன், கதாநாயகி எல்லாமே சரண்யா மேடம் தான். படத்தின் ப்ரோமோஷன் விழா இருக்கு வாங்க என்று நான் மற்றும் இயக்குநரும் அவரிடம் கேட்டோம், ஷூட்டிங் இருக்கு போகிறேன் என்றார்கள். ஷூட் இல்லை என்றால் வாங்க மேடம் என்றோம்.
கெஞ்சி கேட்டும் வரவில்லை
ஆனால், இன்னைக்கு அவங்களுக்கு ஷூட்டிங் இல்லை. கிறிஸ்துமஸ் கொண்டாடுவதாக சொல்கிறார்கள். இதை நான் தவறாக சொல்லவில்லை, இந்த இடத்தில் தனுஷ் அல்லது சூர்யா சார் படமோ, இல்லை பெரிய நடிகரின் படமாக இருந்து இருந்தால் அவங்க இந்த பதிலை சொல்லி இருப்பாங்களா?
நாங்க என்ன அவ்வளவு கேவலமா?
சிறு படதயாரிப்பாளரை ஏன் இவ்வளவு கேவலமா பார்க்குறீங்க? இவ்வளவு நசுக்குறீங்க? நாங்க எல்லாம் சினிமா எடுக்க கூடாதா.. சினிமாவில் நாங்க நடிக்க கூடாதா.. நாங்க எல்லாம் கலைத்துறைக்கு வரக்கூடாதா...தமிழ் சினிமாவை நம்பித்தான் இங்கே, எல்லாரும் வருகிறார்கள். இந்த மண்ணில் பிறந்து, இந்த மண்ணில் வர நினைக்கிறோம். நீங்களே எங்களை ஏன் ஒதுக்குகிறீங்க...எங்களை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்துறீங்க.
எங்களை காயப்படுத்தலாமா?
இந்த படத்தை எப்படியாவது திரையரங்கில் கொண்டுவர வேண்டும் என்று இரவு பகலா கஷ்டப்பட்டு போராடிக்கொண்டு இருக்கிறோம் எங்கள் வலி, எங்கள் வேதனை தெரிந்தும் எங்களை காயப்படுத்தலாமா? படத்தின் விளம்பரத்திற்கு வாங்க உதவுங்கள் என்று தான் கேட்கிறோம். வரவில்லை என்றால் கூட, அன்பான ஆதரவான வார்த்தைகளை சொல்லுங்க. அதை விட்டு விட்டு எங்களை ஏன் நசுக்காதீங்க.
பாரபட்சம் பார்க்காதீர்கள்.
கார் அனுப்புறேன் வாங்க மேடம், எங்களுக்கும் சப்போர்ட் பண்ணுங்க மேடம் என்று கொஞ்சினேன் ஆனாலும் நீங்கள் வரவில்லை. காரணம், என் தரம் அவ்வளவு தான் நடிகரும், தயாரிப்பாளருமா ராஜா வேதனையுடன் அந்த விழாவில் பேசி உள்ளார். தயவு செய்து சிறு தயாரிப்பாளர், பெரிய தயாரிப்பாளர், புதியவன், பழையவன் என்று பாரபட்சம் பார்க்காதீர்கள். மற்றபடி இங்கு வந்திருந்து வாழ்த்திய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.