Ravindar :உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணம்.. முதல் முறையாக மனம் திறந்த ரவீந்தர்!

சென்னை : பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவரும் கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களது திருமணம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஃபேட்மேன் என்று கூறப்படும் ரவீந்தரை பணத்திற்காகத்தான் மகாலட்சுமி திருமணம் செய்ததாக கமெண்ட்ஸ் எழுந்தன.

இதனால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டிங்கில் இந்த ஜோடி இருந்து வந்தது. இவர்கள் எது செய்தாலும் அது ட்ரெண்டானது.

உடல் எடை அதிகரித்த காரணத்தை பகிர்ந்த ரவீந்தர் : சின்னத்திரை நடிகை மகாலட்சுமி மற்றும் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் இடையில் கடந்த ஆண்டில் கோயிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடிக்கு பிறகு இந்த ஜோடி பொதுமக்களிடம் அதிக கவனம் பெற்றது. ஃபேட்மேன் என்று அழைக்கப்படும் ரவீந்தரை, பணத்திற்காகத்தான் மகாலட்சுமி திருமணம் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஆரம்பத்தில் இந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதில் கூறி வந்தனர்.

தொடர்ந்து மீடியாவின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு இந்த ஜோடி பதிலளித்து வந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் தொடர்ந்து ட்ரெண்டிங்கிலேயே இருந்தனர். சமூக வலைதளங்களிலும் இவர்களை ஏராளமானோர் பாலோ செய்தனர். இவர்கள் எது செய்தாலும் அது ட்ரெண்டானது. என்ன பேசினாலும் அதுவும் ட்ரெண்டானது. தொடர்ந்து சீரியல்களில் மகாலட்சுமி தன்னுடைய நடிப்பை தொடர்ந்தார். ரவீந்தரும் தன்னுடைய வேலைகளை தொடர்ந்தார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்கள் இருவரும் தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை வெளியிட்டு வந்தனர். அதிகமான கோயில் பயணங்களில் இவர்களை காண முடிந்தது. இதேபோல மகாலட்சுமியும் அதிகமான விளம்பரங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், ஃபேட்மேன் என்று கூறப்படும் ரவீந்தர், தான் குண்டானதற்கான காரணத்தை முதல்முறையாக தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

Producern Ravindar opens up about his weight issue

ரவீந்தர் தன்னுடைய சமீபத்திய பேட்டியில், தன்னுடைய உடல் எடை என்பது சாதாரணமானதுதான் என்றும் நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதே இந்த விஷயத்தில் முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கையில் அலர்ஜி போல ஏதோ வந்தாகவும் அதற்கு சிகிச்சை எடுக்கப் போய், அந்த மாத்திரைகளின் பாதிப்பால்தான் தன்னுடைய உடல் எடையும் அதிகரித்தது என்றும் கூறியுள்ளார் ரவீந்தர்.

இது பரம்பரை வியாதி இல்லை என்றும், தன்னுடைய 200 கிலோ எடையை தான்தான் தூக்கி சுமந்து வருவதாகவும் அதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை என்றும் ரவீந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு நிகழ்விற்கு சென்றால் அனைவரும் நாற்காலியில் அமர்ந்தாலும் தன்னால் அமர முடியாது என்றும் ரவீந்தர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து யாரும் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் ரவீந்தர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X