Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
விவசாயிகளுக்கான பந்த்... தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு... நோ ஷூட்டிங்!
சென்னை: விவசாயிகளின் நலன் காக்க வரும் ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறவிருக்கும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச் சங்கத்தின் பொதுச் செயலர் கதிரேசன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களின் சம்மேளனமான பெப்சிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், "விவசாயிகளின் உரிமைகளை மீட்டெடுக்கவும், வாடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் குடும்பங்களை அரவணைக்கவும் மத்திய, மாநில அரசுகள் ஆதரவுகரம் நீட்டவேண்டும் என்று வலியுறுத்தி, வருகிற 25.04.2017-அன்று அனைத்து கட்சிகளின் சார்பாகவும், அறிவித்துள்ள அறப்போராட்டத்திற்கு எங்களது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒட்டுமொத்த கலையுலகினர் சார்பாகவும் ஆதரவை தெரிவிக்கிறது என்பதை தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார்.
நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் இரண்டுமே இந்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.