அம்மா திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் வரவேற்பு!

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள இடங்களை தேர்வு செய்து, தேவைக்கேற்ற எண்ணிக்கையில் அம்மா திரையரங்கங்கள் அமைக்கப்படும் என்றும் அவற்றில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ் திரைப்பட உலகில் இன்று சிறு முதலீட்டு படங்களை வெளியிட முடியாமல் பல தயாரிப்பாளர்கள் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்மா திரையரங்குகள் அறிவிப்பு வந்த நாளிலேயே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நல்லதோர் தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று கூறி எஸ்.தாணு தொடர்ந்த வழக்கு அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் கே.ஆர். ஆகிய எனது தலைமையின் கீழ் அமர்ந்து உள்ள நிர்வாகிகள் செயல்பட தடைகள் நீங்கியுள்ளன.
எனவே, நாங்கள் முதல்கட்டமாக உறுப்பினர்கள் அனைவரின் குடும்ப அங்கத்தினருக்கும் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மற்ற சங்க நிர்வாகிகளுடன் பேசி பட வெளியீட்டு தேதியை முறைபடுத்துதல், பட விளம்பரங்களை கட்டுப்படுத்துதல் போன்ற திட்டங்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்," என்றார்.


Click it and Unblock the Notifications











