Don't Miss!
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அன்புச்செழியன் மீது மேலும் 2 முன்னணி தயாரிப்பாளர்கள் போலீசில் புகார்
சென்னை : முன்னணி தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா மற்றும் சி.வி.குமார் ஆகியோர் ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
சசிகுமாரின் மைத்துனரும், கம்பெனி ப்ரொடக்ஷன்ஸ் நிர்வாகியுமான அசோக் குமார் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் கந்துவட்டிக்குப் பணம் வாங்கி அவரது மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டதாக கடிதம் எழுதி வைத்திருந்தார் அசோக் குமார்.
இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுசீந்திரன், அமீர் உள்ளிட்ட இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் சிலர் அன்புச்செழியன் மீது குற்றம் சாட்டினர். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரினர்.
இதுதொடர்பாக, நடிகர் சசிகுமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் தலைமறைவாக இருக்கும் அன்புச்செழியனைத் தேடி வருகின்றனர். அவர் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தலைமறைவாக இருக்கலாம் எனக் கருதி அங்கும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும் பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. சீனு ராமசாமி, சுந்தர் சி, விஜய் ஆண்டனி, மனோபாலா, தேவயானி உள்ளிட்டோர் அன்புச்செழியன் நியாயமானவர் என அவருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
சசிகுமாரிடம் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திடீர் திருப்பமாக, முன்னணி தயாரிப்பாளர்களான ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி.குமார் ஆகியோர் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
வாயில் சோறு.. கணவர் பாட காதை பொத்திக் கொண்டு.. நிறைமாத கர்ப்பிணி அமலா பாலின் லேட்டஸ்ட் வீடியோ!